Skip to main content

அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்!

Published on 05/01/2024 | Edited on 05/01/2024
enforcement officials incident in west bengal

மேற்கு வங்கம் மாநிலத்தில் ரேசன் கடைகள் மூலம் குறைந்த விலையில் உணவு, தானியங்களை வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகப் பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறையினருக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இது குறித்து சோதனை நடத்த வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்களின் கார்களை வழிமறித்து மர்ம நபர்கள் சந்தேஷ்காளி என்ற இடத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் காரில் இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பாதுகாப்புக்காக உடன் சென்ற துணை ராணுவப்படை வீரர்கள் எனப் பலரும் காயமடைந்துள்ளனர். அவர்கள் சென்ற கார்களும் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தான் காரணம் என பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலை நடத்தியது யார் எனத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

சார்ந்த செய்திகள்