Skip to main content

கரோனா வைரஸ் எதிரொலி... ஆந்திரா மந்திராலயத்திற்கு பக்தர்கள் வர வேண்டாம்... பீடாதிபதி சுபுதேந்திர தீர்த்தர் வேண்டுகோள்...!

Published on 19/03/2020 | Edited on 19/03/2020

ஆந்திர மாநிலம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மந்திராலயத்திற்கு பத்தர்கள் வருகையை தவிர்க்க வேண்டும் என மந்திராலய பீடாதிபதி சுதந்திர தீர்த்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 Corona virus issue - priest request

 

 

இதற்கான வீடியோ தமிழகத்தில் உள்ள அனைத்து ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன மடங்களுக்கும். பக்தர்களுக்கும்  அனுப்பப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் பேசும் சுபதேந்திர தீர்த்தர், "கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பக்தர்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் விதமாக அவர்களின் பாதுகாப்பு கருதி மந்திராலயத்திற்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். ஆங்காங்கே உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனங்களில் தங்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டும். மந்திராலயத்தில் தொடர்ந்து அனைத்து பூஜைகளும் நடைபெறும். இதற்கு சுவாமி ராகவேந்திரா பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" வேண்டுகோள் வைத்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்