Skip to main content

மஹாராஷ்டிராவில் 6 ஆயிரத்தை தொடப்போகும் 'கரோனா' 

Published on 28/04/2020 | Edited on 28/04/2020
Corona to touch 6,000 in Maharashtra

 

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,974 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 934 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 6,869 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 393 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தொட இருக்கிறது. தற்போது எண்ணிக்கையானது 5,972 ஆக உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 

சார்ந்த செய்திகள்