இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
நாட்டில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 5,024 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரேநாளில் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு 3,645 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக டெல்லியில் இன்று 3,460 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 63 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக டெல்லியில் 77,240 ஆக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. டெல்லியில் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.