Skip to main content

" பாஜகவின் கணக்கு முடித்து வைக்கப்படும்" - வாக்களித்த பினராயி விஜயன் அதிரடி!

Published on 06/04/2021 | Edited on 06/04/2021
PINARAYI VIJAYAN

 

 

தமிழகத்தை போலவே கேரளாவிலும் சட்டப்பேரவை தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஐக்கிய முன்னணி முன்னணிக்கும், காங்கிரஸிற்கும் இடையே நேரடி போட்டி இருக்குமென கருதப்படுகிறது. இந்தநிலையில் காலை முதலே கேரள அரசியல் தலைவர்கள் வாக்களித்தனர். 11 மணிவரை கேரளாவில் 28.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

பினராயில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்த பினராயி விஜயன், இடது ஐக்கிய முன்னணி வரலாற்று வெற்றி பெரும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "இது ஐக்கிய இடது முன்னணிக்கு ஒரு வரலாற்று வெற்றியாக இருக்கும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கேரள மக்களால் எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகள் எவ்வாறு நிராகரிக்கபட்டதோ அதேபோல் சட்டமன்றத் தேர்தலிலும் நிராகரிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் அந்த உணர்ச்சியை நாங்கள் கண்டோம். தீர்க்கமான வெற்றியை எதிர்பார்க்கிறோம். 2016 முதல், அது நலத்திட்ட நடவடிக்கைகளானாலும், மேம்பாட்டு நடவடிக்கைகளானாலும் அல்லது பேரழிவுகளை எதிர் கொண்டபோதும் மக்கள் எங்களுக்கு ஆதரவாக நின்றனர். எல்லா நேரங்களிலும் எங்களுக்கு ஆதரவாக நின்றவர்கள், தங்களது கட்டளையை பதிவு செய்கிறார்கள். கடந்த சட்டப்பேரவை தேர்தலைவிட, இந்த சட்டப்பேரவை தேர்தலில் இடது ஐக்கிய முன்னணி அதிக தொகுதிகளில் வெல்லும்" என தெரிவித்தார்.

 

தொடர்ந்து அவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற ஓரே ஒரு சட்டமன்ற தொகுதியான நெமோமில் பாஜக தோற்கடிக்கப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர், " நெமோமில் பாஜகவின் கணக்கு முடித்து வைக்கப்படும். ஆனால் வேறு சில தொகுதிகளில் பாஜகவுடன் ஐக்கிய ஜனநாயக முன்னணி (காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி) ரகசிய ஒப்பந்தத்தில் இறங்கியுள்ளதா என்பது எனக்குத் தெரியாது" என கூறினார்.

 

தேர்தல் பிரச்சாரத்தின்போது சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்த நிலையில், அரசு மக்களோடு நிற்பதால், ஐயப்பன் உள்ளிட்ட அனைத்து கடவுள்களும் தங்கள் அரசாங்கத்தோடு உள்ளது என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.