Skip to main content

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி?

Published on 14/01/2020 | Edited on 16/01/2020

நாடு முழுவதும் தற்போது கடுமையான குளிர் நிலவி வரும் சூழ்நிலையில், வட மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு வரலாறு காணாத வகையில் குளிர் நிலவி வருகிறது. புதுதில்லி, பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.  இரவு நேரங்களில் சில மாநிலங்களில் குளிர் 10 டிகிரி வரை இருக்கின்றது. குறிப்பாக புதுதில்லியில் முன் எப்போது இல்லாத அளவில் குளிர் வாட்டி வதைக்கிறது. நேற்று உச்சகட்டமாக 2 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருந்துள்ளது. இதுவரை வட மாநிலங்களில் குளிரின் காரணமாக 60 பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 



இந்த சம்பவம் வட மாநிலங்களை சேர்ந்த மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் மைனஸ் 5 டிகிரிக்கு மேல் குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் இயல்பு வாழக்கை கடுமையாக பாதித்துள்ளது. இந்நிலையில் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் மாச்சில்செக்டர் பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினார்கள். இதில் 5 ராணுவ வீரர்கள் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிமில் பனிச் சரிவு; சுற்றுலா சென்றவர்களுக்கு நேர்ந்த துயரம்!

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

sikkim nathula snow slide tourist incident rescue team involved

 

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி சுற்றுலா பயணிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா என்ற பகுதி இந்தியா - சீனா எல்லை பகுதியில் உள்ள சுற்றுலாத் தளம் ஆகும். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்குள்ள இயற்கை காட்சிகளை காண வருகின்றனர். இந்நிலையில் கேங்டாக் - நாதுலாவை இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 14வது மைல்கல் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த சுமார் 30 சுற்றுலா பயணிகள் இந்த பனிச் சரிவு விபத்தில் சிக்கியதாகத் தெரிய வந்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் பனிச் சரிவில் சிக்கியவர்களை கடும் போராட்டத்திற்கு பிறகு சுமார் 23  பேரை போராடி உயிருடன் மீட்டனர். மேலும் பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களும் மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது. வேறு யாரேனும் பனிச் சரிவில் சிக்கி உள்ளனரா என மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிச் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

தீவிர பனிப்புயல்; 130 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

japan snowstorm

 

ஜப்பான் நாட்டில் தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவால் ஜப்பான் நாட்டின் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் ஜப்பானில் நேற்று (19.01.2021) தீவிர பனிப்புயல் வீசியது. இந்த தீவிர பனிப்புயலால் மியாகி மாகாணத்தில் உள்ள தோஹோகு விரைவு நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதி முழுவதுமே வெண்நிற பிரதேசமாய் காட்சியளிக்கத் தொடங்கியது.

 

இந்தப் பனிப்புயலால், தோஹோகு விரைவு நெடுஞ்சாலையில் சென்ற 130க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் 200 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்றாலும், பனிப்புயலின் காரணமாக விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அந்த வாகனங்களையும் பனி மூடியுள்ளது.

 

வானிலை மோசமாக இருப்பதால் பாதுகாப்புடன் இருக்கும்படி ஜப்பான் பிரதமர் யோஷீஹிடே சுகா கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.