Skip to main content

முதல் ஆளாக பிரச்சாரத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின்! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
ddd

 

வரும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சார பயணத்தை, முதல் ஆளாக தனது தாத்தா பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து துவங்க இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

 

தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறது தேர்தல் ஆணையம். கரோனா இருந்தாலும் திட்டமிட்டபடி தேர்தல் நடந்தே தீரும் என தலைமை தேர்தல் ஆனையர் திட்டவட்டமாக கூறிவிட்டார். வாக்காளர் வரைவு பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

 

இந்த சூழலில் வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள ஆளும்கட்சி, எதிர்கட்சி, கூட்டணிக் கட்சிகள் என போட்டிப்போட்டுக்கொண்டு ஆயத்தமாகி வருகின்றனர். பாஜக எப்படியாவது தமிழக சட்டமன்றத்தில் நுழைந்துவிட வேண்டும் என வேல்யாத்திரை மூலம் தங்களுக்கான கூட்டத்தை சேர்த்துக்கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுகவோ ஜெயலலிதா பாணியில் கரன்சியையும், அதிகாரத்தையும் ஒருபுறம் பலமாக நம்பிக்கொண்டு, மறுபுறம் அரசு நிகழ்ச்சிகள் மூலம் தங்களது சாதனைகளை கூறிவருகிறது.

 

ddd

 

எதிர்கட்சியான திமுகவோ இந்த தேர்தல் வாழ்வா சாவா தேர்தல் என பல வியூகங்களை வகுத்து களத்திற்கு சென்றுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இணையதளம் மூலம் தமிழகத்தை மீட்போம் என முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்திருக்கிறார். திமுகவின் தேர்தல் பணிக்குழுவினரும் மாவட்டம் மாவட்டமாக சென்றுள்ளனர். 

 

இந்தநிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் நபராக நூறுநாள் தேர்தல் பிரச்சாரப்பயணத்தை தனது தாத்தாவின் பிறந்த ஊரான திருக்குவளையில் துவங்கி திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மூன்று மாவட்டங்ககளில் முதற்கட்டமாக முடிக்கிறார்.

 

ddd

 

உதயநிதியின் வருகைக்காக நாகை மாவட்டம் திருக்குவளையில் திமுகவினர் உற்சாகமாக வேலைகளை செய்து வருகின்றனர். அதேபோல திருவாரூரிலும் மயிலாடுதுறையிலும் பேனர், போஸ்டர் என வேகமெடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து நாகை மாவட்ட திமுகவினர் கூறுகையில், "உதயநிதியின் வருகை சோம்பிக்கிடக்கும் திமுகவினரை உற்சாகப்படுத்தும், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் அவரது வருகைக்கு பிறகு கட்சியில் உள்ள இளைஞர்களின் எழுச்சி அதிகமாகியது. அதோடு அவரது பிரச்சாரமும் சற்று கை கொடுத்தது. அதை எல்லாம் தாண்டி உதயநிதி கலைஞரைப்போல கைராசிக்காரர். அதனாலத்தான் அவரே முதலில் மக்களை சந்திக்கும் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. திருக்குவளை கலைஞர் பிறந்த ஊர் என்பதை தாண்டி செண்டிமெண்டான ஊர் என்பதால் அங்கிருந்து துவங்கப்படுகிறது. கரோனா ஊரடங்கை காரணம் காட்டி அதிமுக தடுக்க நினைத்தால் தடையை மீறி பிரச்சாரம் செய்வோம், அதன்பிறகு அவங்க எங்கேயும் ஒரு நிகழ்ச்சிக்கூட நடத்த முடியாதபடி செய்திடுவோம்" என்கிறார்கள்.

 

கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி திமுக இளைஞரணி செயலாளராக பொருப்பேற்றதும், திருக்குவளைக்கு வந்த உதயநிதிக்கு வழி நெடுகிலும் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்