Skip to main content

''நாங்க எங்க போறது?'' - புலம்பிய நிர்வாகிகளுக்கு உறுதியளித்த எ.வ.வேலு!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

dddd


திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன. இதில், திமுக தெற்கு மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், செங்கம் என நான்கு தொகுதிகள் உள்ளன. 


கலசப்பாக்கம் தொகுதி அதிமுகவின் பலமான தொகுதி என்கிற பெயரோடு இருந்தது. இதனால், சில தேர்தல்களாக அந்த தொகுதியில் திமுக போட்டியிடாமல் பாமக, காங்கிரஸ் கட்சிகளுக்கு எனத் தள்ளிவிட்டுக்கொண்டு இருந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டே ஆகவேண்டும் என முடிவுசெய்த மா.செ.வேலு, இதற்காக தொகுதியின் பொறுப்பாளராக, தனது மகன் டாக்டர் கம்பனை சில ஆண்டுகளுக்கு முன்பு களமிறங்கினார்.
 

அவர் தீவிரமாகக் களப்பணியாற்றினார். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுக வேட்பாளர் அண்ணாதுரைக்கு அதிகமான வாக்குகள் அங்கு கிடைத்தது. அதற்கடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் கலசப்பாக்கம், புதுப்பாளையம் ஒன்றியங்களில் ராஜதந்திரமாகக் களமிறங்கி திமுகவினர் சேர்மனாக்கப்பட்டார்கள். இதில் மகிழ்ந்த திமுக நிர்வாகிகள் கம்பனை அங்கு வேட்பாளராக்க வேண்டும் என முடிவு செய்தனர்.
 

இது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக அந்த தொகுதியில் சீட்டை எதிர்பார்த்த திமுக பிரபலங்கள் மறைமுகமாகப் புலம்பத் துவங்கினார்கள். சமூக ரீதியான பிரச்சனையும் எழுந்தது.


திருவண்ணாமலை எம்.எல்.ஏ வேலு, நாயுடு சமுதாயம். கீழ்பென்னாத்தூர் எம்.எல்.ஏ பிச்சாண்டி நாயுடு சமுதாயம். கலசப்பாக்கம் தொகுதியில் கம்பன் நிறுத்தப்பட்டால் அவரும் நாயுடு சமுதாயம். இது எப்படிச் சரியான ஒதுக்கீடாக இருக்கும். மற்ற சாதிகள் இங்கு இல்லையா என்கிற கேள்வியை மாவட்டத்தில் பலமாகவுள்ள வன்னியர், முதலியார் ஆகிய சாதி கட்சிப் பிரமுகர்கள் எழுப்பினர். மற்றொருபுறம் இருக்கும் நாலு தொகுதியில் அப்பா, மகன் ஆளுக்கொரு தொகுதி எடுத்துக்கொண்டால் நாங்கள் எங்கு போய்ப் போட்டியிடுவது என்கிற கேள்வியை எழுப்பினர்.
 

cnc

 

இந்தத் தகவல்கள் எல்லாம் வேலு கவனத்துக்கும் சென்றன. இதனால் கட்சிக் கூட்டங்களில், என் மகன் அந்த தொகுதியின் வேட்பாளர் இல்லை எனப் பேசினார் வேலு. இந்நிலையில், மாவட்டத்தில் மீண்டும் சலசலப்புகள் எழுந்ததன் விளைவாக, கலசப்பாக்கம் தொகுதி கட்சிப் பிரமுகர்களை ஒன்றியம் வாரியாக அலுவலகத்துக்கு அழைத்து, என் மகன் வேட்பாளரில்லை, நீங்களே சரியான வேட்பாளரை முன்னிறுத்துங்கள். நம் கட்சி அங்கு இந்த முறை போட்டியிடுவது உறுதி. உங்களுக்குள் கோஷ்டிப் பூசலை அதிகப்படுத்திக்கொண்டு கழகம் நிறுத்தும் வேட்பாளரை தோற்கடித்துவிடாதீர்கள். அனைவரும் ஒற்றுமையாக நின்று ஒருவரை வேட்பாளராக முன்னிறுத்துங்கள். அவர் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்.
 

இதனால் முதலியார் சாதியைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சீட் பெற்றுவிட வேண்டுமென பல பிரமுகர்களும் அங்கு முட்டி மோதிக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில் அந்தத் தொகுதியை எங்களுக்கு ஒதுக்குங்கள் எனக் காங்கிரஸ் கட்சி கேட்டுவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.