Skip to main content

மொத்தம் 20 மாநிலங்கள், 91 தொகுதிகள்... தொடங்கியது மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு...

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

இன்று மக்களவை தொகுதியின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 14.22 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

 

voting


 

சத்தீஸ்கர், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களிலுள்ள 1 மக்களவை தொகுதிக்கும் தொகுதிக்கும், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், மேகாலயா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களிலுள்ள தலா 2 தொகுதிகளுக்கும், பீகார், ஒடிசாவில் தலா 4 தொகுதிகளுக்கும், உத்திரகாண்ட், அசாமில் 5 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவிலுள்ள 7 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவின் 17 தொகுதிகளுக்கும், ஆந்திராவின் 25 மக்களவை தொகுதிகளுக்கும், யூனியன் பிரதேசங்களான அந்தமான்-நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளிலுள்ள 1 மக்களவை தொகுதி ஆகியவற்றில் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 மாநிலங்களிலுள்ள, 91 மக்களவை தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 
 

மேலும் 4 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. ஆந்திராவிலுள்ள 175 தொகுதிகள், அருணாசல பிரதேசத்தின் 60 தொகுதிகள், சிக்கிமிலுள்ள 32 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவிலுள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல்கட்டமாக 28 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
 

இவற்றுள் சில மாநிலங்களுக்கு பலகட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.