Skip to main content

திமுக மாதிரி சட்டபேரவை கூட்டத்தில் கருணாஸ் பங்கேற்பு!

Published on 30/05/2018 | Edited on 30/05/2018
இஏஅ


திமுகவின் மாதிரி சட்டப்பேரவை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.


இதில் அதிமுகவின்  இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற கருணாஸ் எம்.எல்.ஏ பங்கேற்றுள்ளார். அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள், பறிபோகும் ஜனநாயகம் என்ற பொருளில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் நடைபெறுகிறது. மாதிரி சட்டமன்றக் கூட்டத்தின் சபாநாயகராக சக்கரபாணி கூட்டத்தை நடத்துகிறார்.

முதலில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மாதிரி சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடி வழங்கும் தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். தொடர்ந்து துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார் மு.க.ஸ்டாலின்.

 

சார்ந்த செய்திகள்