Skip to main content

பெயரால் ஏற்பட்ட குழப்பம்... தொற்று உள்ள நபரைப் பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்த மருத்துவர்கள்..

Published on 20/04/2020 | Edited on 20/04/2020


ஒரே பெயர் கொண்ட இருவருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரைத் தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆந்திர மருத்துவர்கள். 

 

corona confussion in andhra

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 24 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.6 லட்சத்திற்கும் அதிகமானோர்  பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 17,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,800 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஒரே பெயர் கொண்ட இருவருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகளில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக கரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரைத் தவறுதலாக வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் ஆந்திர மருத்துவர்கள்.

ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டம், காட்டூரி மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்காக ஒரே பெயரைக் கொண்ட இருவர் வந்துள்ளனர். இதில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றொருவருக்கு கரோனா இல்லை எனச் சோதனை முடிவுகள் வந்துள்ளது. ஆனால், மருத்துவர்கள் கரோனா உள்ளவரிடம், அவருக்கு கரோனா இல்லை எனக் கூறி, அம்மாநில அரசு அறிவித்த 2000 ரூபாய் உதவித்தொகையை கையில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
 

http://onelink.to/nknapp


பின்னர் தவறு நடந்திருப்பதை உணர்ந்த மருத்துவர்கள், கரோனா தொற்று உள்ள நபரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்து நடந்தவற்றைக் கூறியுள்ளனர். ஆனால், அந்த நபர் மீண்டும் மருத்துவமனைக்கு வர மறுத்துள்ளார். அதன் பின்னர், நடந்த விவரங்களைப் போலீஸாருக்குத் தெரிவித்த மருத்துவர்கள், போலீஸாரின் உதவியோடு அந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றி என்.ஆர்.ஐ மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். இந்தக் குழப்பம் காரணமாகத் தொற்று இருப்பவரின் வீட்டில் உள்ள மேலும் 4 பேரையும் மருத்துவப் பரிசோதனைக்காக குண்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.