Skip to main content

"உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" - நடிகர் விஷ்ணு விஷால் பேச்சு 

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

Vishnu Vishal

 

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள எஃப்.ஐ.ஆர். திரைப்படம், பிப்ரவரி 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படக்குழு இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தது.  

 

அந்த நிகழ்வில் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், "ராட்சசன் படத்திற்கு பிறகு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் எனக்கு மிகப்பெரிய புகழ் கிடைத்தது. நான் எங்கு சென்றாலும் அந்தப் படத்தை பற்றியே பேசினார்கள். என்னை ஒரு நடிகனாக மதிக்க ஆரம்பித்தார்கள். இனி நடிக்கும் படங்களில் மிகவும் கவனமாக நடிக்க வேண்டும் என்று எனக்குப் புரிதல் கிடைத்தது. ராட்சசன் படத்திற்கு பிறகு வெளியான படங்கள் அனைத்தும் முன்பே நான் நடித்த படங்கள். ராட்சசன் படத்திற்கு பிறகு நான் நடித்த படங்களில் முதலில் வெளியாவது எஃப்.ஐ.ஆர்.தான்.

 

இயக்குநர் மனு முதலில் ஒரு கதை கூறினார். அந்தக் கதை எனக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் வேறு கதை இருக்கிறதா என்று கேட்டேன். அப்போது அவர் கூறிய கதைதான் எஃப்.ஐ.ஆர். படத்தை முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. படத்தை இதற்கு மேல் அவரால் தொடர முடியாது என்ற நிலை வந்தவுடன், சார் நீங்க இந்தப் படத்திற்காக டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்... வேறு படத்துல நடிங்க என்று மனு என்னிடம் கூறினார். ஒரு அறிமுக இயக்குநர் எப்போதும் எப்படியாவது படம் இயக்க வேண்டும் என்றுதான் நினைப்பார். ஆனால், மனு நேர்மையாக இப்படி பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது உண்மை பிடித்திருந்த காரணத்தால்தான் இந்தப் படத்தை தயாரிக்கவும் முடிவு செய்தேன். தனுஷ் சார் படம் பார்த்துவிட்டு ராட்சசன் விஷ்ணு விஷாலுக்கும் எஃப்.ஐ.ஆர். விஷ்ணு விஷாலுக்கும் இடையே ஒரு நடிகராக மிகப்பெரிய வித்தியாசம் பார்க்கிறேன் எனப் பாராட்டினார். 

 

உதயநிதி ஸ்டாலின் அண்ணன் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். இப்ப மட்டுமல்ல, குள்ளநரி கூட்டம் படத்தையே அவரது நிறுவனம் தான் ரிலீஸ் பண்ணிக் கொடுத்தாங்க. அங்க இருந்துதான் என்னுடைய வாழ்க்கையே மொத்தமாக மாறியது. இதற்காக உதய் அண்ணாவிற்கும் மூர்த்தி சாருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது" எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
vishnu vishal once again joined with gatta kusthi movie director

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இது குறித்து பேசிய விஷ்ணு விஷால், “கட்டா குஸ்தி படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பு தான் எங்களை மீண்டும் இணைய வைத்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.