Skip to main content

ஆந்தாலஜியில் இணையும் வெங்கட் பிரபு - பா.ரஞ்சித் கூட்டணி

Published on 02/11/2020 | Edited on 02/11/2020
venkat prabhu

 

 

கரோனா தொற்று பாதிப்பால் திரைப்படங்களின் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு பணிகளுக்கு, அரசு அனுமதி வழங்கியிருந்தாலும், பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதால் படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை. திரையரங்குகளும் இனிதான் திறக்கப்படவுள்ளன. இதனால்  தமிழ் சினிமா இயக்குனர்கள், தற்போது ஆந்தாலஜி  படங்களில் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைவான நடிகர்கள் மற்றும் படக்குழு, குறுகிய  கால படப்பிடிப்பு என கரோனா  தொற்று காலத்திற்கு ஏற்றதாக இருப்பதால் பலரும் ஆந்தாலஜி படங்களை எடுக்க தொடங்கியுள்ளனர். சமீபத்தில், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்தினம், கார்த்திக் சுப்புராஜ், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் ஆகியோர் இணைந்து இயக்கிய 'புத்தம் புது காலை" ஆந்தாலஜி வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, இயக்குனர் மணிரத்தினம் ஒரு ஆந்தாலஜியை தயாரிக்கிறார். அதில் சூர்யா, விஜய் சேதுபதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்  நடிகைகள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான், இமான் முன்னணி இசையைப்பாளர்கள் இசையமைக்கின்னர்.  கௌதம் மேனன், கார்த்திக் நரேன் உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர். நடிகர் அரவிந்த்சாமியும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த ஆந்தாலஜியை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஆந்தாலஜி ஒன்றை தயாரிக்கவுள்ளார்.

 

இந்த ஆந்தாலஜியை வெங்கட் பிரபுவோடு இணைந்து பா.ரஞ்சித், ராஜேஷ் சிம்புதேவன் ஆகியோர்  இயக்கவுள்ளனர். இப்படத்திற்கு 'தி விக்டிம்' என பெயரிடப்பட்டுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிவகார்த்திகேயன், தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அந்தாலஜி  ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்