Skip to main content

"காதல் என்ற வார்த்தை கூட போதுமானதாக இருக்காது" - காதலியை அறிமுகப்படுத்திய கவுதம் கார்த்திக்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

gautham karthik announced he is love witha manjima mohan

 

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோவாக வலம் வருபவர் கவுதம் கார்த்திக். மணிரத்னத்தின் 'கடல்' படத்தின் மூலம் அறிமுகமான இவர். ரங்கூன், இவன் தந்திரன், தேவராட்டம் உள்ளிட்ட சில ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். இப்போது சிம்பு நடிக்கும் 'பத்து தல' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் என்.எஸ்.பொன்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘ஆகஸ்ட் 16 - 1947' படத்திலும் நடிக்கிறார். 

 

இதனிடையே கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே கோலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டது. அதனைத் தற்போது இருவருமே அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் இருவரும் பகிர்ந்துள்ளனர். 

 

இது குறித்து மஞ்சிமா மோகன், "மூன்று வருடங்களுக்கு முன்பு நான் முற்றிலும் தொலைந்துபோன போது நீ ஒரு காவலனாய் என் வாழ்வில் வந்தாய். வாழ்க்கையைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை மாற்றி, நான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர உதவினாய். நீ எப்போதும் எல்லாவற்றிலும் என்னுடைய ஃபேவரட்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மேலும் கவுதம் கார்த்திக், "சரியான நபர் உங்கள் வாழ்வில் வந்தால் என்ன நடக்கும்? பெரும்பாலானவர்கள் சொல்வார்கள், நீங்கள் அவர்கள் மீது உங்கள் கண்களை வைத்த நொடியில் நீங்கள் அன்பினால் நிறைந்திருப்பீர்கள், உங்கள் இதயத்தில் பட்டாம்பூச்சிகள் பறந்து செல்வது போல் நீங்கள் உணர்வீர்கள் என்று. அது இப்போது என் வாழ்வில் நடந்திருக்கிறது. மஞ்சிமா மோகன், நீ நமக்குள் ஏற்படுத்திய உறவை விவரிக்க 'காதல்' என்ற வார்த்தை கூட போதுமானதாக இருக்காது. ஐ லவ் யூ" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், தமிழில் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு நடிகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து 'தேவராட்டம்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

கார்த்திக் சுப்புராஜ் பதிலடிக்கு மஞ்சிமா மோகன் ஆதரவு

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

manjimaa mohan supports karthik subbaraj answer

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியான படம்  'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. 2014 ஆம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர். இதில் கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். பின்பு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர். அப்போது கார்த்திக் சுப்புராஜிடம், “சித்தா படத்தில் நிமிஷா சஜயன் ரொம்ப நல்லா பண்ணியிருப்பாங்க. அவங்க பார்ப்பதற்கு அழகா இல்லைன்னாலும் நடிப்பு அருமையாக இருக்கும். அவங்களை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.    

 

இதற்குப் பதிலளித்த கார்த்திக் சுப்புராஜ், “அழகா இல்லைன்னு எப்படி சொல்ல முடியும். அது உங்களுடைய மனநிலை. யாரையும் அப்படி சொல்ல முடியாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “அவங்க ஒரு நல்ல திறமையான நடிகர் என தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தில் பார்த்தேன். மலைவாழ் மக்களிடமிருந்து ஒருவரை கல்யாணம் பண்ணி மதுரையில் வாழ்ந்திட்டு வர ஒரு பொண்ணு கேரக்டர். படம் முழுக்க அவர் கர்ப்பிணியாக இருக்கும் சமயத்தில் தான் கதை நகரும். அந்த கேரக்டருக்குள் புருஷன் மேல் லவ், கோவம், பாசம் என நிறைய இருக்கும். இத்தனை எமோஷ்னலையும் உள்ள வச்சிக்கிட்டு, நடிக்க ஒரு கிரேட் பெர்ஃப்பார்மர் தேவைப்பட்டாங்க. அதனால் அவரை தேர்ந்தெடுத்தேன்” என்றார். 

 

இந்த கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் சொன்ன பதில் பலரை கவர்ந்துள்ளது. அந்த வகையில் இது தொடர்பான வீடியோவை நடிகை மஞ்சிமா மோகன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, கார்த்திக் சுப்புராஜை ஆதரித்துள்ளார்.