Skip to main content

13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இனைந்த 'ஈரம்' பட கூட்டணி

Published on 15/12/2022 | Edited on 15/12/2022

 

aadhi next is sabdham directed by Arivazhagan

 

தமிழில் 'மிருகம்' படம் மூலம் அறிமுகமான ஆதி 'ஈரம்' படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து ஆதி நடிப்பில் வெளியான 'அய்யனார்', 'யாகாவாராயினும் நா காக்க', 'மரகத நாணயம்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. இதனிடையே ரஜினியின் 'கோச்சடையான்', லிங்குசாமி இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான 'தி வாரியர்' உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆதி நடிப்பில் தற்போது 'பாட்னர்' படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹன்சிகா, பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்குகிறார்.

 

இந்நிலையில் ஆதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 'ஈரம்' படம் இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். 'சப்தம்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குவது மட்டுமல்லாது தயாரிக்கவும் செய்கிறார் அறிவழகன். 'ஈரம்' படத்திற்கு இசையமைத்த தமன் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

 

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'ஈரம்' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் அதே கூட்டணி தற்போது 13ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் அறிவழகன் கடைசியாக 'தமிழ் ராக்கர்ஸ்' என்ற இணையத் தொடரை இயக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் டூ ஒலி - மீண்டும் வித்தியாசம் காட்டும் வெற்றிக் கூட்டணி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Aadhi and Arivazhagan Sabdham movie teaser released

இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இருவரும் ஈரம் பட வெற்றிக்கு பிறகு இணைந்துள்ள படம் சப்தம். 7ஜி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமி மேனன், ரெடின் கிங்ஸ்லி, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி வெளியானது. 

இந்த நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. வசனங்கள் ஏதும் இடம் பெறாத இந்த டீசரில் திகில் படங்களுக்கு உண்டான அம்சங்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஈரம் படத்தில் தண்ணீரை வைத்து படத்தில் வித்தியாசம் காட்டியது போல் இப்படத்தில் ஒலியை வைத்து முயற்சி செய்துள்ளனர் படக்குழு. 

ஏற்கெனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஈரம் படம் இதே ஜானரில் வெளியாகி பலரது பாராட்டை பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு திகில் படத்திற்காக வித்தியாசமான கதைக்களத்தின் பிண்ணனியில் இணைந்துள்ள இக்கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இப்படம் கோடைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

உருவாகும் மரகத நாணயம் 2

Published on 27/07/2023 | Edited on 27/07/2023

 

Maragadha Naanayam 2

 

ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் 'மரகத நாணயம்'. ஃபேண்டஸி காமெடி படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டில்லிபாபு தயாரித்திருந்த இப்படத்திற்கு திபு நைனன் தாமஸ் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற 'நீ கவிதைகளா...' பாடல் இளைஞர்கள் மத்தியில் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் சரவன் தெரிவித்துள்ளார். படத்தை, முதல் பாகத்தைத் தயாரித்த டில்லிபாபுவே அவரது ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விரைவில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்திற்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.