Skip to main content

தொடர் காய்ச்சலால் மனமுடைந்த பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
தொடர் காய்ச்சலால் மனமுடைந்த பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை!

கோவையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் ஜாபர் எனும் மாணவர், இன்று பிற்பகல் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஷமீம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஜாபர், ராம்நகர் பகுதியில் உள்ள சபர்மன் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஜாபருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறபடுகின்றது. இந்நிலையில், இன்று பள்ளிக்கு சென்ற ஜாபர், பிற்பகலில் தனக்கு உடல் நிலை சரியில்லை என பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்துவிட்டு, பள்ளி ஊழியர் உதவியுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

வீட்டிற்கு வந்த ஜாபர் வீட்டில் இருந்த மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனடியாக ஜாபரின் தாயார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஜாபரை மீட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரத்தினபுரி காவல்துறையினர் ஜாபரின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரத்தினபுரி போலிசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- அருள்

சார்ந்த செய்திகள்