Skip to main content

அரசுக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா!

Published on 12/01/2018 | Edited on 12/01/2018
அரசுக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா!

முடச்சிக்காடு - கலைஞர் நகர் சமத்துவபுரம் அருகே உள்ள பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா வியாழன் அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் டெ.கிளாடிஸ் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சி.ராணி வரவேற்றார். கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய வேட்டி, சட்டை, சேலை அணிந்து பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர்.



விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் கொன்றை ஏ.கே.வெள்ளிமலை, பேராசிரியர்கள் ர.ராஜ்மோகன், ந.மகேஸ்வரி, நா.பழனிவேலு மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பொங்கல் விழாவையொட்டி நடனப்போட்டி, கோலப்போட்டி, உரி அடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்