Skip to main content

2024 நாடாளுமன்ற தேர்தல்; உ.பியில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடும் - மம்தா பானர்ஜி அதிரடி!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

MAMATA BANERJEE

 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவராக மம்தா பானர்ஜி இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவே தங்களின் முக்கிய எதிரி எனth தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது; 2024-ல் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதால், கட்சியை வலுப்படுத்துமாறு கட்சித் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன். 34 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியை மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்ற முடியுமென்றால், நிச்சயம் பாஜகவையும் நாட்டிலிருந்து அகற்ற முடியும். அவர்கள் நமது முக்கிய எதிரிகள்.

 

மேகாலயா மற்றும் சண்டிகரில் பாஜகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான அனைத்து கூட்டங்களும் ஒன்று சேர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் யாராவது வேறுவிதமாக நினைத்துக்கொண்டு, கர்வத்துடன் இருந்தால், நம் நமது பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டியதுதான். பாஜகவை தோற்கடிக்க பிராந்திய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

 

உத்தரபிரதேசத்தில் இருந்து காங்கிரசும், குஜராத்தில் இருந்து பாஜகவும் தேசிய கட்சியாக உருவெடுத்தது போல், மேற்கு வங்கத்தில் இருந்து  திரிணாமூல் காங்கிரஸ் தேசிய கட்சியாக உருவெடுத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை ஆதரிக்கப் போகிறேன். 2024 மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடுவோம். கோவாவில் நமது கட்சியை உருவாக்கியுள்ளேன், திரிபுராவில் நமது வாக்கு சதவீதம் 20%க்கு மேல் உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் வங்கத்தை வலிமையாக்க வேண்டும், அதன்மூலம்(2024 மக்களவைத் தேர்தலில்)  42 இடங்களையும் பெறுவோம். பாஜகவை விரட்டியடிக்க வேண்டும்.

 

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலின்போது, பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு பதிலளித்த திரிணாமூல் காங்கிரஸ், "2024-ல் பாதுகாப்பான தொகுதியை பார்த்துக்கொள்ளுங்கள். வாரணாசியில் உங்களுக்கு சவாலளிக்கப்படும்" தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இது மம்தா, மோடியை எதிர்த்து களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பை கிளப்பியது. அதேபோல் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியா?" என பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை தாக்கியுள்ளார். ஆமாம் பிரதமரே. இன்னொரு தொகுதியிலிருந்து போட்டியிடுவார். அது வாரணாசி. எனவே உங்கள் கவசத்தை தயார்செய்து கொள்ளுங்கள்" எனக் கூறினார்.

 

இது எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், "2024 தேர்தலுக்கான கவுன்டவுன் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வாரணாசியில் மோடி கடுமையான சவாலை எதிர்கொள்வார். வாரணாசியில் மோடிக்கு எதிராக மம்தா களமிறங்குவாரா என்பது குறித்து கட்சியும், கட்சித் தலைவரும் பின்னர் முடிவெடுப்பர்" என திரிணாமூல் கட்சியின் செய்தித்தொடர்பாளர் எதிர்பார்ப்புகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தார். இந்தசூழலில் மம்தா திரிணாமூல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்திலிருந்து போட்டியிடும் என அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“காங்கிரசிற்கு ஒரு வாக்குக்கூட கிடைக்காது” - மம்தா பானர்ஜி அதிரடி பேச்சு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Mamata Banerjee speech on Congress won't get a single vote in west bengal

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றது. வரும் 26ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. 

அதன்படி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று (24-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “மேற்கு வங்கத்தில் 26,000 ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்களிடமிருந்து அல்ல, எந்த அரசாங்க ஊழியரிடமிருந்தும் பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது. உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதி கிடைக்கும் என இன்னும் நான் நம்புகிறேன்.

பாஜக உயர் நீதிமன்றத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். சி.பி.ஐயை விலைக்கு வாங்கியுள்ளனர். என்.ஐ.ஏ.வை வாங்கியுள்ளனர். பி.எஸ்.எப்-ஐ விலைக்கு வாங்கியுள்ளனர்.  தூர்தர்ஷனின் நிறத்தை காவி நிறமாக்கி விட்டார்கள். அதில், பாஜக மற்றும் மோடியைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். அதைப் பார்க்காதீர்கள். புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.