Skip to main content

“கொலை செஞ்சிட்டு சமாதானமா போனா சட்டம் ஏத்துக்குமா? ; அக்கா தம்பி பேச்சு அப்படிதான் இருக்கு...” - புதுமடம் ஹலீம் தடாலடி

Published on 26/11/2022 | Edited on 28/11/2022

 

ரதக

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக புதுமடம் ஹலீம் அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,

 

"டெய்சி அவர்கள் சூர்யா பேசிய ஆடியோ பாஜகவில் உள்ள தலைவர்களிடம் கொடுத்து விட்டேன் என்கிறார். ஆனால் அவர் ரகசியமாகக் கொடுத்த ஆடியோ வெளிவருகிறது என்றால் பாஜகவில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. அப்படி என்றால் வேண்டுமென்றே அவர்கள் ஆடியோவை வெளியே லீக் செய்துள்ளார்கள் என்றுதானே நினைக்கத் தோன்றும். இதைச் சாதாரணமாகக் கடந்து போக முடியாது. இப்ப வேண்டுமானால் அவர்கள் நாங்கள் அக்கா தம்பி என்று பேசலாம், மறந்துவிட்டோம் என்று கூறலாம். ஆனால் இதை எளிதாக எப்படிக் கடந்துவிட முடியும்.நாளை வேறு ஒருவருக்கும் இந்த பாதிப்பு நிச்சயம் ஏற்படலாம். அப்போது யார் அவருக்கு உதவி செய்வார்கள். பொது வெளியில் வார்த்தைகளில் சொல்லக் கூச்சப்படும் அளவுக்கு ஆபாச வார்த்தைகளை இவர் பேசியுள்ளார். மெரினாவில் கையை வீசுவேன் தலையை வீசுவேன் என்று கொலை மிரட்டலை விடுத்துள்ளார். இதை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இதை அனுமதிக்கலாமா, சட்டப்படி இது எவ்வளவு பெரிய குற்றம்.

 

ஆனால் நாங்கள் எங்களுக்குள்ளான சண்டை சரி செய்துவிட்டோம் என்கிறார்கள். இது என்ன கட்சியா இல்லை கட்ட பஞ்சாயத்து இடமா என்று தெரியவில்லை. அவரை கட்சியை விட்டு முழுமையாக நீக்கிவிட்டு இப்படிப்பட்ட நபர் பாஜகவுக்கு தேவையில்லை என்றுதானே சொல்லி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் சமாதானம் பேசவே இவர்கள் விரும்புகிறார்கள். இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஒரு மூத்த தலைவர் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அளவில் ஒரு ட்வீட் போடுகிறார். அவரின் அந்த கருத்துக்கு தற்போது வலு சேர்ந்துள்ளதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அப்போது கமலாலயத்தில் இந்த விவகாரம் தொடர்ந்து நடக்கிறது என்று அவர்கள் சொல்ல வருகிறார்களா என்று தெரியவில்லை.

 

இது டெய்சிக்கு மட்டும் நடந்ததாகக் கருத முடியாது. போன மாதம் பாஜகவின் மாநில தலைவர் சசிகலா புஷ்பாவுக்கு என்ன நடந்தது. மாலை அணிவிக்கும் போது அவருக்கு நடந்த அநீதியை அனைவரும் பார்த்தோம். குஷ்பு தனக்கு நடந்தபோது பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார்கள்; போராட்டத்திற்கு அழைத்தார்கள். இப்போது அவர்கள் கண் எதிரே இத்தனை பெரிய விஷயம் நடந்துள்ளது ஆனால் மிக அமைதியாக இருக்கிறார்கள். தனக்கு வந்தால் பிரச்சனை அடுத்தவர்களுக்கு வந்தால் நீண்ட மவுனமா என்ற கேள்வி வருகிறது அல்லவா?இதற்கு கண்டிப்பாக குஷ்பு பதில் சொல்லியே ஆக வேண்டும்.  கொலை செஞ்சிட்டு சமாதானமா போனா சட்டம் ஏத்துக்குமா? அவர்கள் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள்" என்றார்.


 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார்.