Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியாகவே பார்க்கிறோம்: வைகைச்செல்வன் பேட்டி

Published on 28/02/2019 | Edited on 28/02/2019


 

இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
 

நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அதிமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன்,
 

அதிமுகவையும் இரட்டை இலையையும் பிரிக்க முடியாது. எங்கள் உணர்வில், உயிரில் கலந்தது, எங்கள் ரத்தமும் சதையுமானது இரட்டை இலை. அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வராற்று பக்கங்களை திருப்பி பார்த்தால் அதன் முதல் பக்கத்தில் இந்த வீர வரலாறு நிறைந்திருக்கும். திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வருகிறபோது எம்.ஜி.ஆரால் இரட்டை இலை சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டு, அன்று ஆளும் கட்சியாக இருந்த திமுகவையும், மத்தியில் ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியையும் தேர்தல் களத்தில் பின்னுக்கு தள்ளி புதிதாக அறிமுகமான இரட்டை இலை சின்னம் வெற்றி பெற்று நிலையான ஒரு வரலாறை பிடித்து. 

 

vaigai selvan


அதன் அடிப்படையில்தான் மூன்று முறை தமிழகத்தின் முடிசூடா மன்னனாக எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அதன்பிறகு ஜா அணி, ஜெ அணி என பிளவுபட்டு இரட்டை புறா, சேவல் சின்னம் என நின்றது. அதற்கு பிறகு இரண்டு அணியும் இணைந்து இரட்டை இலை சின்னம் கோரப்பட்டு மீண்டும் சின்னம் கிடைத்தவுடன் 91ல் அதிமுக ஆட்சியை பிடித்தது. நான்கு முறை அதிமுகவை ஆட்சிப் பொறுப்பில் கொண்டு வந்தார் ஜெயலலிதா. ஆறு முறை முதல்வராக பதவியேற்றார். 

இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எதிரிகள் ஒரு பக்கம், துரோகிகள் ஒரு பக்கம் தடுத்து நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மகிழ்ச்சியடைகிறோம். இரட்டை இலை சின்னம் கிடைத்ததை வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முதல் வெற்றியாக நினைக்கிறோம். இதனை நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியாகவே பார்க்கிறோம். 
 

மீண்டும் கட்சியில் பொதுச்செயலாளர் பதவி வருமா?
 

பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதாதான். அவரைத்தான் நாங்கள் நிரந்தர பொதுச்செயலாளர் என அழைக்கிறோம். அவர் அமர்ந்திருந்த பதவியில் யாரும் அமரக்கூடாது என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் கருத்து. அந்த அடிப்படையில்தான் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புகள் உருவாக்கப்பட்டது. கட்சிக்குள் எந்த மாற்றமும் நிகழாது. இவ்வாறு கூறினார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.