Skip to main content

பெரிய இடத்து பெண்கள் பற்றி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசுவார்களா..? - ராஜேஸ்வரி பிரியா ஆவேசம்!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019


கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்து அக்கட்சியில் இருந்து பிரிந்து வெளியே வந்தார் ராஜேஸ்வரி பிரியா. இவர் பாமகவில் இருந்து வெளியே வந்ததும், கமலை உடனடியாக சந்தித்து பேசினார். அதனால் எப்படியும் மக்கள் நீதி மய்யத்தில்தான் இணைவார் என்ற பேச்சு எழுந்து. ஆனால் எந்த கட்சியுடனும் இணையவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் யாருடனாவது கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரையுமே நம்பாமல் தனியாகவே ஒரு புதிய கட்சியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வருவதுடன், கமலையும் சேர்த்து விமர்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் நம்மிடம் பேசியபோது,
 

gd



கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இதுதொடர்பாக நடிகர் கமலிடமே உங்கள் நிகழ்ச்சியை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால், இதனால் எந்த மாற்றமும் இதுவரை நடைபெறவில்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு எதுக்கு? இதனை 60 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் கமல் தொகுத்து வழங்குகிறார். பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. கமலுக்கு சமூக பொறுப்பு என்பது அறவே இல்லை. மக்களை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கும் கமலுக்கு அதற்கான தகுதி சுத்தமாக இல்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெளி மாநில ஆட்களுக்கு நம் மாநிலத்தை பற்றி எதுவுமே தெரியாது.கலாச்சாரம், பண்பாடு இது எதுவும் இல்லை. 
 

இவங்களுக்கு ஒரு விளம்பரம் வேணும், இன்னொன்னு பணம் வேணும். இதில் கலந்து கொள்பவரின் கோபம், ஈகோ, சண்டை இதெல்லாம் நாம தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறோம்? ஆபாசமா டிரஸ் போட்டுக்கிட்டு, படுத்துக்கிட்டு, பேசிக்கிட்டு, 60 கேமிராக்கள் இருப்பது உங்களுக்கு சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனால் எங்க குழந்தைங்க நாளைக்கு அதே மாதிரி இருக்கணும்னா நாங்க என்ன பண்றது? இது தமிழர்களுக்கே சம்பந்தமே இல்லாத ஒரு நிகழ்ச்சி. என்ன ஆர்மி? நம்ம ராணுவத்தில் நிஜமாவே செத்து போறவங்களை பத்தி ஏதாவது கவலை இருக்கா? எந்த ராணுவ வீரரையாவது இவர்கள் ஹீரோவா ஏத்துட்டு இருக்காங்களா? ஏன் விவசாயத்தை பத்தி நிகழ்ச்சி நடத்தலாமே, ஏன் நடத்தல? 100 நாட்களில் இந்த நிலத்தில் யார் விவசாயம் பண்ணி அதிக மகசூல் தருகிறார்கள் என்று பார்க்கலாமே? பாத்ரூம் போற வரைக்கும் கேமரா வைத்துள்ளார்கள். இதை எப்படி புரிந்துகொள்ள முடியும். இப்படி செய்வதற்கு உள்ளேயே கேமரா வைத்துவிடலாமே? இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அவர்கள் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறார்கள். இதை பார்ப்பவர்கள் யாரும் அதை விரும்பி பார்க்கவில்லை. ஆர்வத்தை உண்டாக்குவதால் என்ன இருக்கிறது என்று பார்க்க விரும்புகிறார்கள். நான் அந்த நிகழ்ச்சியை ஒருபோதும் பார்ப்பதில்லை. முகப்புத்தகத்தில் புரோமோ போடும்போது பார்ப்பேன். தனியாக யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம். குடும்பமாக பார்க்க முடியுமா?
 

 

சின்ன வயதை உடைய குழந்தைகளின் மனது இந்த நிகழ்ச்சியை பார்த்தால் சலனப்படும். அவர்களை பக்குவப்படுத்தாவிட்டாலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளால் அவர்களை சீரழிக்காமல் இருக்க வேண்டியது மிக முக்கியம். கமல் போன்ற ஆட்கள் இதை ஏன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டித்து வருகிறோம். தமிழக இளைஞர்களை, மாணவர்களை இந்த நிகழ்ச்சி மனதளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்தும் முன் அதனை நிறுத்த வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதை கண்டிப்பாக செய்வோம்.அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சரவணன் பேருந்தில் பெண்களை இடிப்பேன் என்று கூறியதை எப்படி ஒளிபரப்பினார்கள். அந்த நிகழ்ச்சியை கட் செய்துதானே போடுகிறார்கள். பெரிய இடத்து பெண்களை பற்றி யாராவது அந்த நிகழ்ச்சியில் கூறினால் அதை ஒளிபரப்புவீர்களா? ஏழைகள் என்றால் ஒருவித இளக்காரம். அந்த கொடூர தன்மையே இந்த மாதிரியான விபரீத நிகழ்ச்சிகளை நடத்த அவர்களுக்கு துணிச்சலை கொடுக்கிறது.
 

Next Story

“ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்கள்...”- சர்ச்சையாகும் மீராமிதுனின் வீடியோ

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர் மீராமிதுன். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

meera mithun

 

 

அதில் , “ஏன் 'வீ ஆர் தி பாஸ்' என்ற நிகழ்ச்சியை பண்ணினார்கள் எனத் தெரியவில்லை. பிபி ஹவுஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே இருந்தோம். ஆண்களை வைத்துத் தான் இந்த ஷோவே நடந்தது போல் காட்டியுள்ளார்கள். மும்பையில் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால், நான் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கவில்லை. ஆனால், ட்விட்டர் பக்கத்தில் அந்நிகழ்ச்சியில் என்னைக் கிண்டல் செய்ததாகக் என்னுடைய ரசிகர்களும், நண்பர்களும் கூறினார்கள்.

தமிழ்நாட்டில் சிலர் என்னை இழிவாகப் பேசித் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த 4 ஆண்களும் இணைந்திருப்பது எனக்குப் பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அந்த நால்வருமே என் பின்னால் தான் வீட்டிற்குள் சுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாருக்குமே தில் கிடையாது. வீட்டிற்குள்ளேயே என்னை அப்படிப் பார்ப்பார்கள். அவர்கள் கோழைகள். என்னிடம் பேசுவதற்குக் கூட மற்ற பெண்களுக்குத் தெரியாமல் பயந்து பயந்து பேசுவார்கள். என்னுடன் ஒரு நாள் பேசுவார்கள், அதற்குமேல் பேசினால் அவர்களுக்கு பெண்களின் ஓட்டு கிடைக்காது என்பதால் இப்படி செய்வார்கள். ஒரு ஆண் என்னிடம் பேசினால் மற்ற ஆண்களுக்கு பொறாமை வரும் அப்படி இருந்தார்கள். அந்த வீட்டிற்குள் நடைப்பதை நன்கு கவனித்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.

உங்கள் யாருக்குமே என்னைப் பற்றிப் பேசவில்லை என்றால் புகழே கிடையாது. நான் தான் மிகவும் புகழ் வாய்ந்தவள். அந்த 4 ஆண்களுக்குமே எனது புகழைப் பற்றித் தெரியும். ஆகையால் தான் நால்வரும் எனக்காக அடித்துக் கொண்டார்கள். 

சமூக வலைதளத்தில் என்னை திருநங்கை என்று கிண்டல் செய்வது, பீர் அடிக்கிறேன்,என்னை கருப்பு என்று கேலி பேசுவது எல்லாம் எந்த கூட்டம் செய்கிறது என்பது எனக்கு தெரியும். நீங்கள் அதையே தொடர்ந்து செய்யுங்கள். தமிழ்நாட்டில் எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்பது எனக்கு தெரியும். இனி நான் தினசரி ஒரு வீடியோ போட்டு அடிச்சிட்டே இருப்பேன். எனக்கு என்ன புகழ் இருக்கிறது என்றா கேள்வி எழுப்புகிறீர்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற ஹீரோ, ஹீரோயின்களைவிட எனக்கு நேஷனல் மற்றும் இண்டர்நேஷனல் லெவலுக்கு புகழ் இருக்கிறது. இதை நான் எங்குவேண்டுமானாலும் எழுதி தருகிறேன். அவங்களெல்லாம் தமிழ்நாடு தாண்டினா யாருக்குமே தெரியாது. அவங்க என்ன மிஞ்சிபோனா படம்தான நடிக்கிறாங்க, ஆனால் எனக்கு நேஷனல், இண்டர்நேஷனல் லெவல் புகழ் இருக்கிறது. என்னுடைய பெருமையை நானே பீற்றிக்கொள்ளக்கூடாது என இருந்தேன். இந்த ஆறு வருடம் நான் பாசிடிவ் பப்ளிசிட்டியில் இருந்தேன். அதை உடைக்க வேண்டும் என்றே சிலர் என்னுடைய பெயரை முழுதாக டேமேஜ் செய்திருக்கிறார்கள். எல்லாத்துக்கும் அடி கொடுத்துட்டே இருப்பேன்” என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

சாண்டியை தூக்கிவைத்து கொஞ்சிய சிம்பு... வைரலாகும் வீடியோ

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி நூறு நாட்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முடிவடைந்துவிட்டது. மலேசியாவை சேர்ந்த தமிழரான முகின் இந்த மூன்றாம் சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களிடம் பிரபலமடைந்த சாண்டி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
 

simbu


இந்த மூன்றாம் சீசன் பிக்பாஸ் போட்டி தொடங்கியதில் இருந்து மக்களிடம் பேராதர்வை பெற்று வந்தவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. அவரும் கவினும் சேர்ந்து பாடு பாடல்கள் எல்லாம் வெளியே செம வைரலானது. அவர் பிக்பாஸை குருநாதா என்று கூப்பிடுவது வைரலாகி, டீசர்ட்டாக சேல் ஆனது. சாண்டியின் புகழால் அவருடைய மகளுக்கு வெளியே லாலா ஆர்மி கூட உருவாக்கப்பட்டது. அந்தளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
 

ff


சாண்டி மாஸ்டர் சிம்புவின் நெருங்கிய நண்பர். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தனக்கு முதலில் வாய்ப்பு கொடுத்தவரும் சிம்புதான் என்று சிம்பு போலவே பேசி அசத்தினார். இந்நிலையில் சிம்புவை நேரில் சந்தித்துள்ளார் சாண்டி மாஸ்டார். அப்போது தன்னுடன் சக போட்டியாளராக பங்குபெற்ற தர்ஷனையும் உடன் அழைத்து சென்றிருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன்னை பார்க்க வந்த இருவருக்கும் ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்துள்ளார்.
 

dfgzsgd


இதுவரை சிம்புவின் நெருங்கிய நண்பர்களான ஹரிஷ் கல்யாண், மகத் உள்ளிட்டவர்கள் கடந்த இரண்டு பிக்பாஸில் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.