Skip to main content

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான விவகாரத்தில் அரசியலா?

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

"தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் வேலைக்காக கடந்த அக்டோபரில் சேர்ந்த ஒரு பெண்மணி,  தன்னிடம் கோகாய் தவறாக நடக்க முயன்றார்ன்னு புகார் கொடுத்து பரபரப்பாயிடிச்சி. அந்தப் பெண்மணி, ஒரு மாற்றுத் திறனாளியிடம் வேலை வாங்கித் தருவதாக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினாராம். இது தொடர்பான புகார் காவல்துறைக்குப் போனதால், அந்தப் பெண்மணியை, கோகாய் வேலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதமே டிஸ்மிஸ் செய்துவிட்டாராம்.  இந்த நிலையில்தான் இப்போது அந்தப் பெண்மணி கோகாய்க்கு எதிராக அதிரடியாகப் பாலியல் புகாரை எழுப்பி யிருக்கார். அதோட உச்ச நீதிமன்ற நீதிபதி கள் 22 பேருக்கு, இது தொடர்பாகக் கடிதமும் எழுதி நீதிகேட்டிருக்கார். இந்தப் புகார் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வைத்தே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடமே விளக்கம் கேட்டிருக்கார்.''

 

supreme court judge



"ஆமாம்ப்பா... இது பொய்ப் புகார் என்று விளக்கமளித்திருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன் மீதான இந்த புகாரை விசாரிக்கும் பொறுப்பை அருண் மிஸ்ரா, சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிடம் ஒப்படைச்சாரே?'"ஆமாங்க தலைவரே, இந்த வழக்கை விசாரிச்ச அந்த உச்சநீதிமன்ற பெஞ்ச், இந்த புகாருக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லைன்னு சொல்லியிருக்கு. சில முக்கிய மான வழக்குகள் குறித்த தீர்ப்பைத் தான் வழங்க இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட புகாரை தன் மீது எழுப்புவதன் பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பதாக ரஞ்சன் கோகாய் சொல்லியிருக்கார்.''தலைமை நீதிபதிக்கு எதிரான இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. தரப்பு ஒரு பக்கம்னா எதிர்க்கட்சியான காங்கிரஸ் சீனியர் வழக்கறிஞர்களும் களத்தில் இருக்காங்களே?''

"ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக "இந்து' நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை, முற்றாக ஒதுக்கமுடியாது. அவற்றை உச்ச நீதிமன்றம் பரிசீலிச்சுதான் முடிவெடுக்கும்ன்னு அண்மையில் உச்ச நீதிமன்றம் உறுதியாகச் சொன்னது.  இதனால பா.ஜ.க. அரசுக்கு ரஞ்சன் கோகாய்மீது கடுமையான கோபமாம். அதேபோல், நேசனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாங்கியது தொடர்பான வழக்கு, இப் போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதேபோல் ரபேல் ஊழல் வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் விசா ரணைக்கு வந்தது. இதனால்தான், கோகாய்க்கு எதிரான புகாரில் காங்கிரஸ் வழக்கறிஞர்களான கபில் சிபல், இந்திரா ஜெய்சிங், துஷ்யந்த் தவே, பிருந்தா குரோவர் போன்றோர் தீவிர ஆர்வம் காட்டுகிறார் களாம்.  எது எப்படி இருப்பினும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் மீதே இப்படி ஒரு புகார் எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''
 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.