திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என சத்தியம் செய்திருந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தற்போது அந்த விரதத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். இதனை முதன் முதலில் நக்கீரன்தான் பதிவு செய்தது. குறிப்பாக, பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்ததையும் அதனை பா.ம.க. தலைமை ஒப்புக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதையும் கடந்த மாதமே அம்பலப்படுத்தியிருக்கிறோம். இந்த நிலையில், இரு கழகங்களிடமும் பா.ம.க. பேச்சு நடத்தி வருவது தற்போது தேர்தல் அரசியலில் பரபரப்பை உருவாக்கி வருகிறது.
இது குறித்து பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, ""நாடாளுமன்றத் தேர்தலோடு 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்க விருக்கிறது. இதில் பாப்பிரெட்டி பட்டி, அரூர், ஆம்பூர், குடி யாத்தம், சோளிங்கர், பூந்தமல்லி, திருப்போரூர், பெரம்பூர் ஆகிய 8 தொகுதிகள் வட தமிழகத்தில் வருகிறது. இதில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றிபெற்று சட்ட மன்றத்தில் நுழைய விரும்புகிறது பா.ம.க. தலைமை. கூட்டணிக்கு பா.ம.க.வின் முதல் சாய் ஸாக இருந்தது தி.மு.க. தான். ஆனால், இதில் முந்திக்கொண்டது அ.தி. மு.க.தான். எம்.பி.க்களை விட எம்.எல்.ஏக்கள் முக்கியம் என கணக்குப் போட்ட எடப்பாடி, கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வட தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெற்றுள்ள பா.ம.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பி தூது விட்டார். எல்லா விவரங்களும் பேசப்பட்ட நிலையில், பா.ம.கவுடன் ரகசிய பேச்சுவார்த்தையை துவக்கியிருக்கிறது தி.மு.க.'' என்கின்றனர் பா.ம.க. தலைமைக்கு நெருக்கமான அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்.
பா.ம.க.வை தி.மு.க. பக்கம் கொண்டு வருவதில் துரைமுருகன் முதல் ஸ்டெப் வைக்க, ஐ.பெரியசாமி போன்றவர்கள் ஆதரித்துள்ளனர். ஆனால், பொன்முடி, எ.வ.வேலு, ஆ.ராசா உள்ளிட்டவர்கள் கடுமையாக எதிர்த்ததால் பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தரவில்லை ஸ்டாலின். ஆனால், இதில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைமையின் பார்வை வேறு என்கிறார்கள்.
இது குறித்து தி.மு.க. தரப்பில் நாம் விசாரித்த போது, ""தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒரு சீட்டும் கிடைக்கக் கூடாது என திட்டமிடும் ராகுல் காந்தி, அ.தி.மு.க. + பா.ஜ.க. உருவாக்கும் கூட்டணி யின் வெற்றியை தடுக்க வேண்டுமானால் பா.ம.க.வை மட்டும் வெளியே கொண்டுவந்து தி.மு.க. கூட்டணிக்குள் இணைத்துவிட்டால் வட தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறாது என தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சொன்ன யோசனையை தீவிரமாகப் பரிசீலித்திருக்கிறார்.
தன்னோடு நெருக்கமான தொடர்பிலிருப்பவர்கள் மூலம் ஸ்டாலினுக்கு தகவல் அனுப்பினார் ராகுல். தி.மு.க. நிர் வாகிகள் சிலரும் கூட்டணிக் கணக்கு களைப் போட்டுக் காட்ட, இதனைத் தொடர்ந்தே, பா.ம.க.வுக்கு க்ரீன் சிக்னல் தந்திருக் கிறார் ஸ்டாலின். 4 எம்.பி.தொகுதி, 3 இடைத் தேர்தல் தொகுதி என பேச்சுவார்த்தை நகர்ந்து வருகிறது. அநேகமாக தி.மு.க. கூட்டணிக்குள் பா.ம.க. வந்துவிடும்''’ என்கின்றனர் விவரமறிந்த தி.மு.க. மா.செ.க்கள்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி உறுதி செய்யப் பட்ட நிலையில், காங்கிரஸ் மூலம் தி.மு.க. தற் போது அழைப்பதால் ராமதாசுக்கும் அன்புமணிக்கு மிடையே வாதப் பிரதிவாதங்களும் நடந்திருக்கின் றன. அ.தி.மு.க.வை விட தி.மு.க.தான் சரியாக இருக்கும் என நம்பிக்கையுடன் அன்புமணியும், தேர்தலில் கூட்டணி தர்மத்தை தி.மு.க. மதிப்ப தில்லை என்கிற சந்தேகத்தை ராமதாசும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 6 எம்.பி.தொகுதி, 3 இடைத்தேர்தல் தொகுதி என உறுதி செய்திருந்த எடப்பாடி, தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. தாவ முயற்சிப்பதை அறிந்து டென்சனாகி யிருக்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரிடம் விசாரித்தபோது, ""வன்னியர் பொதுச் சொத்து நல வாரியத்திற்கு சட்ட அங்கீகாரமும் ஜனாதிபதி ஒப்புதலும் கிடைத்ததால் வன்னியர்கள் மத்தியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மதிப்பு உயர்ந்தது. இதனை பா.ம.க. ரசிக்கவில்லை. திண்டி வனத்தில் ராமதாஸ் கட்டி யுள்ள கல்லூரிகள் உள்ளிட்ட பல சொத்துக்கள் வாரியத்தின் பிடியில் வரும். இந்தச் சூழலில் தான் கூட்டணி அழைப்பை கொடுத்தார் எடப்பாடி.
அதைக்கெட்டியாக பிடித் துக்கொண்ட பா.ம.க., வாரியத்துக்கு தலைவரை நியமிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 4 கண்டிஷன்களைப் போட்டது. அதனை எடப்பாடி ஏற்றுக்கொண்ட நிலையில்தான் அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி ஆரோக்கியமாக நகர்ந்தது. ஆனால், தற் போது அ.தி.மு.க. கூட்டணியை பா.ம.க. உதற நினைப்பதையறிந்து டென்சனான எடப்பாடி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தானத்தை வாரியத்தின் தலைவராக நியமித்துவிட்டார். தி.மு.க.வை தவிர்த்துவிட்டு அ.தி.மு.க. பக்கம் பா.ம.க. வரும் பட்சத்தில் வாரியத்தின் செயல்பாடுகள் முடக்கப் படும்'' என்கிறார்கள் மிக அழுத்தமாக.
இதற்கிடையே, பா.ம.க.வை சேர்க்கக் கூடாது என அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் போர்க் கொடி தூக்குவோரின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.
-இரா.இளையசெல்வன்
இரண்டு சைடும் பா.ம.க! -கூட்டணி நிலவரம்!
Next Story
'வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும்'-ராமதாஸ் கோரிக்கை
'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது ஏற்கனவே நலிவடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப்பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.
தொடக்கப்பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு -பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில் தான் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.
தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாக கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.
ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பது தான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?
தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக கூறுவது கேலிக்கூத்து.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.
அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.
Next Story
'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி
'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த 26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.
கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.
கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.