Skip to main content

'மாணவ தலைவன் முதல் மத்திய அமைச்சர் வரை' யார் இந்த அருண் ஜெட்லி..?

Published on 24/08/2019 | Edited on 24/08/2019

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலத்தில் தீவிர பிராமண குடும்பத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்த அவர், தன்னுடைய பள்ளி படிப்பை டெல்லியில் உள்ள புனித சேவியர் பள்ளியில் பயின்றார். பள்ளிப்படிப்பை முடித்த அவர், கல்லூரியில் பொருளியல் பாடத்தை தேர்ந்தெடுத்து பட்டம் பெற்றார். படிப்பில் படு சுட்டியாக விளங்கிய அவர், கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்படிப்பின் மீது உள்ள தீவிர ஆர்வத்தால் தில்லி சட்டக்கல்லூரியில் சேர்ந்த அவர் அதனை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 1987ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 1982 ஆம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்த அவருக்கு ரோகன் என்ற மகனும், சோனாலி என்ற மகளும் உள்ளனர். சிறுவயது முதலே ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது தீவிர ஆர்வத்தில் இருந்த அவர், ஜனசங்கத்தில் இருந்து பாஜக உருவான போது அதில் தன்னை இணைந்து கொண்டார். இவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்ததால், பாஜகவில் விரைவில் பிரபலமடைந்தார்.
 

f



வாய்பாய் அமைச்சரவையில் அமைச்சராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்த அவர், மோடி அமைச்சரவையில் நிதி அமைச்சராக தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில்தான் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது. தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் மிக முக்கிய சாதனை இதுதான் என்று ஜிஎஸ்டியை மக்களவையில் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களிடம் அருண் ஜெட்லி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்த தேர்தலில் இவர் உடல் நிலையை காரணம் காட்டி அவர் போட்டியிடவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். இருந்தும் மத்திய அமைச்சராக அவர் பதவியேற்றுக்கொண்டார். அமைச்சர் பதவி ஏற்றதால் அவர் சில மாதங்களிலேயே மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல்வி அடைந்தும் அவர் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டது அப்போது சர்ச்சையை ஏற்ப்படுத்தியது.

 

Next Story

டெல்லி கிரிக்கெட் மைதானத்துக்கு 'அருண் ஜெட்லி' பெயர்....கேலரிக்கு கோலியின் பெயர்!

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த மாதம் காலமானார். அவர் டெல்லி மாநில கிரிக்கெட் சங்க முன்னாள் தலைவராக இருந்தார். அதனால் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பெரோஸ் ஷா கோட்லா என்ற பெயரை மாற்றி அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. இதற்கான நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. அருண் ஜெட்லிக்கு கவுரவம் சேர்க்கும் வகையில் டெல்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.  

 Delhi International Cricket Ground NAME ARUN JAITLY AND VISITORS SEATING BUILDING VIRAT KOHLI NAME


இதேபோல் மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் இருக்கை மாடத்திற்கு (கேலரி) இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் பெயரும் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட்கோலி, ஷிகர் தவான் உட்பட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர். 



 

Next Story

பிரபல கிரிக்கெட் மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர்... கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு...

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.

 

The Ferozeshah Kotal Grounds in New Delhi will be renamed as the Arun Jaitley Stadium.

 

 

கிரிக்கெட் மீது தனி ஆர்வம் கொண்டிருந்த அருண் ஜேட்லிக்கு மரியாதையை செலுத்தும் விதமாக டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜேட்லியின் பெயரை வைப்பது என டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானம் அருண் ஜேட்லி பெயராலேயே அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.