Skip to main content

“இந்த கரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது” - பாடகர் யேசுதாஸ் வருத்தம்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

spb and yesudass

 

'பாடும் நிலா பாலு' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று (26.09.2020)உடல் நலக் குறைவால் (74 வயது) மறைந்தார்.

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி.யின் உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்ததாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், இன்று காலை எஸ்.பி.பி.யின் உடல், தாமரைப் பாக்கத்திலுள்ள அவரது தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரோனா காலகட்டம் என்பதால் பலரும் நேரில் கலந்து அஞ்சலி செலுத்த முடியாமல் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் பாடகர் கே ஜே யேசுதாஸ் எஸ்.பி.பி மறைவு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் பாலு என்னுடைய உடன்பிறந்தவர் போன்றவர். பாலு என்னை எவ்வளவு நேசித்தார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அண்ணா என்று கூப்பிடும்பொழுது ஒரு அம்மா வயற்றில் பிறக்கவில்லை ஆனால் உடன்பிறந்தவர் போலப் பழகியவர். முன் ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.யும் சகோதர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் அவருடைய சங்கீத ஞானம் பெரிய அளவில் இருக்கும். பாட்டுப் பாடவும் செய்வார், உருவாக்கவும் செய்வார்.

 

'சங்கராபரணம்' என்ற படத்தில் முறையாக சங்கீதம் கற்றவருக்கு இணையாக பாடியிருப்பார் அதைக் கேட்டால் யாரும் இவர் சங்கீதம் கற்கவில்லை எனக் கூறமாட்டர்கள். இரண்டு பேருடைய குடும்பமும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். 'சிகரம்' படத்தில் பாடிய 'அகரம் இப்போ சிகரம் ஆச்சு...' என்ற பாடல் பாலு எனக்குப் பரிசாகப் பாடியதாகக் கூறினார். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. யாரையும் புண்படுத்தமாட்டார். உடன் இருக்கும் எல்லோரையும் அன்பாகவும் ஆதரவாகவும் பார்த்துக்கொள்வார்.

 

Ad

 

நாங்கள் கடைசியாக பாடியது ஒரு சிங்கப்பூர் ப்ரோக்ராம்மில் தான். பாலு நோய் குணமாகி எப்போ வீடு திரும்புவார் என நான் அமெரிக்காவில் காத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த கரோனாவால் நமக்கு ஒரு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நான் அமெரிக்காவில் இருந்து இங்கே வர அனுமதி இல்லை. என்னால் அவரை பார்க்க முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது என்றும் அவர் நினைவுகளுடனே இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்