Skip to main content

எக்ஸ்ட்ரா பவுன்சர்ஸ்.. கூடுதல் போலீஸ் பாதுகாப்பு.. ரோகிணியில் வாரிசு - துணிவு கொண்டாட்டம்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

Varisu thunivu celebration at Rohini cinemas

 

நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் அவர்களை சந்தித்தோம். அப்போது அவரிடம் வாரிசு மற்றும் துணிவு பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்கும்? ஒரே நாளில் வெளியாகும் படங்களின் ரசிகர்களுக்காக என்ன மாதிரியான வேலைகளெல்லாம் செய்திருக்கிறீர்கள்? போன்ற கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...

 

பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த துணிவும் விஜய் நடித்த வாரிசும் திரைக்கு வர இருக்கிறது. இரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகிறது. துணிவும் வாரிசும் தனித்தனியாக வந்திருந்தாலும் நல்ல வசூல் ஆகியிருக்கும். தனியா ஒரு தியேட்டர் மட்டுமே வச்சிருக்கவங்களுக்குத்தான் எதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. எங்களுக்கு அப்படியில்லை. ரோகிணி தியேட்டரை பொறுத்தமட்டில் ஏழு ஸ்கிரீன் இருக்கு. தியேட்டருக்குள் உள்ள ஸ்கிரீன்களை பிரிச்சு படத்தை போடப்போறோம். 

 

தியேட்டர் கொண்டாட்டத்தின் போது சீட்ட உடைக்கிறவங்க, கண்ணாடியை உடைக்கிறவங்களை ரசிகர்களாகவே எடுத்துக்கிறதில்லை. அது ஒரு வித மனநோய் உள்ளவங்களாத்தான் பார்ப்போம். அந்தந்த ஸ்டார்களே அவர்களை ரசிகர்களாக எடுத்துக்கிறதில்லை. இந்த முறை முன்னை விட அதிக அளவு பவுன்சர்ஸ் இறக்குறோம். இந்த பகுதி போலீஸ் ஸ்டேசன்ல எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் கேட்டு இருக்கோம். சிசிடிவி தியேட்டர் ஃபுல்லா வச்சிருக்கோம். தவறு செய்றவங்க மேல கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்.

 

நள்ளிரவு 1 மணிக்கு துணிவு; விடியற்காலை 4 மணிக்கு வாரிசு திரையிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆடலாம், கொண்டாடலாம். பாதிப்பை ஏற்படுத்தாமல் இரண்டு பேரின் ரசிகர்களும் சகோதரத்தன்மையுடன் இருக்க வேண்டும்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.