Skip to main content

'நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தேன்... அவர் கூப்பிட்டதால் வந்தேன்' - தமிழ்ப்படம் சிவா 

Published on 11/07/2018 | Edited on 11/07/2018
mr.chandramouli

 

tamizhpadam

 

 

 

சி.எஸ்.அமுதன் இயக்கி சிவா - ஐஸ்வர்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் 'தமிழ்ப்படம் 2' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் 'தமிழ்ப்படம் 2' படக்குழுவினர் நாளுக்கு நாள் பல்வேறு நடிகர்கள் நடித்த படங்களை கலாய்த்து போஸ்டர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் தன் சினிமா கேரியர் குறித்து மனம் திறந்து பேசுகையில்... "குவார்ட்டர் கட்டிங் தோல்விக்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ரேடியோவில் வேலை பார்க்கும்போது சுந்தர்.சி அழைத்ததால் 'கலகலப்பு' படத்தில் நடித்தேன். இடையில் படம் இயக்கும் எண்ணத்தில் கதைகள் எழுத தொடங்கினேன். தற்போது சென்னை 28 பார்ட் 2, கலகலப்பு 2, பார்ட்டி, தமிழ்படம் 2 என்று வாழ்க்கை மீண்டும் பழையபடி போகிறது. நாம் ஒரு திட்டம் வைத்து இருந்தால், கடவுள் ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். பார்ப்போம்" என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்