Skip to main content

' #MeToo வில் அர்ஜுன் மீது சாட்டிய குற்றச்சாட்டிற்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது' -  சுருதிஹரிஹரன் பரபரப்பு!

Published on 17/11/2018 | Edited on 17/11/2018
arjun shruti

 

2015ஆம் ஆண்டு வெளியான 'நிபுணன்' படத்தில் அர்ஜுன், சுருதிஹரிஹரன் இணைந்து நடித்தனர். அப்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் தன்னை இறுக்கி அனைத்து உடலில் கைவிரல்களை படர விட்டார் என்று சுருதிஹரிஹரன் 'மீடூ' வில் பாலியல் புகார் கூறினார். இதனை மறுத்த அர்ஜூன் கோர்ட்டில் சுருதிஹரிகரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதிலடியாக சுருதிஹரிகரனும் போலீசில் அர்ஜூன் ஓட்டலில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் ரிசார்ட்டுக்கு வருமாறு அழைத்தார் என்றும் புகார் அளித்தார். அர்ஜூன் மீது பாலியல் துன்புறுத்தல், மிரட்டல்,  அவதூறு, பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

 

 

 

இதனால் அர்ஜூன் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சுருதிஹரிஹரன் மீது அர்ஜுன் தொடர்ந்த வழக்கில் அவரை கைது செய்ய நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். இந்நிலையில் நடிகை சுருதி ஹரிகரன் பெங்களூருவில் உள்ள பெண்கள் கமி‌ஷன் தலைவியை சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். மேலும் இச்சந்திப்பு குறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது.... "மீடூ' வில் அர்ஜூன் மீது நான் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு என்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. அதனை கோர்ட்டில் சமர்ப்பித்து இருக்கிறேன். அர்ஜூன் ஆதரவாளர்கள் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். அவர்களால் எனது வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறேன்" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

''கொரோனா இப்போது காற்றிலும் கலந்துள்ளது என்கின்றனர்'' - அர்ஜுன் எச்சரிக்கை!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்துகொண்டே வருகிறது. அதேபோல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கட்டுக்குள் கொண்டுவர இந்தியா முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்று அறிவுரை பலர் தெரிவித்தாலும், சிலர் இதன் அவசியம் புரியாமல் இன்னமும் வெளியேறுகின்றனர். 

 

arjun

 

 

இதனைக் கண்டிக்கும் விதமாகவும், அவர்களுக்கு அதன் அவசியத்தை புரியவைக்கும் விதமாகவும் நடிகர் அர்ஜுன் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... “எல்லோரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், யாரும் வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள். இது உங்களுக்காக மட்டுமல்ல, வயதான தாய், தந்தை, குழந்தை, குடும்பம் அனைவரையும் காப்பாற்றும் முயற்சியாகும். கொரோனா வைரஸ் தும்மினால், இருமினால் பரவும் என்று கூறினர். ஆனால் இப்போது காற்றிலும் இது இருக்கிறது என்கின்றனர். எனது நண்பர் ஒருவர் இத்தாலியில் நர்சாக இருக்கிறார். அவரிடம் பேசும்போது இத்தாலியில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. அதில் 600 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று கூறினார். இதன் மூலம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். கொரோனா வைரஸ் ஆபத்து தெரிந்தும் வெளியே ஜாலியாக சுற்றுவதை நிறுத்துங்கள். வீட்டில் இருங்கள். குடும்பத்தையும், நாட்டையும் காப்பாற்றுங்கள்" எனக் கூறியுள்ளார்.

 

Next Story

பாடகி சுசித்ராவின் நிலை என்ன?

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

பிரபல திரைப்பட பாடகி சுசித்ரா,  ’யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட படங்களில் நடித்த கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார்.  திரைப்படங்கள், விழாக்கள் என்று பரபரப்பாக இருந்தார் சுசித்ரா. கடந்த 2017ம் ஆண்டில் திடீரென சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் இருந்து,  ’சுச்சி லீக்ஸ்’ என்ற பெயரில் தனுஷ், விஜய் டிவி டிடி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, சின்மயி, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரின் அந்தரங்க வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியானதால் திரையுலகம் அதிர்ந்தது. இதையடுத்து, தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்து, அதிலிருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள்’’ என்று சுசித்ராவே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

’இது ஹேக்கர்களின் வேலை அல்ல, சுசித்ராவேதான் வெளியிட்டுள்ளார், அவருக்கு மனநிலை சரியில்லை’ என்றும் அப்போது தகவல் பரவியது.  இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில்,  இதை யாரும் பெரிதுபடுத்தவேண்டாம் என்று சுசியின் கணவர் கார்த்திக் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் இந்த விவகாரம் தொடர்ந்த நிலையில், சுசித்ராவிடம் இருந்து கார்த்திக் விவாகரத்து பெற்றார்.  

 

s

 

விவாகரத்திற்கு பின்னர் தனது குடும்பத்தினரை விட்டு விலகி, அடையாறில் உள்ள வீட்டில் சுசித்ரா தனியாக வாழ்ந்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் காணாமல் போய்விட்டதாக, அவரது தங்கை சுஜிதா, அடையாறு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சுசித்ராவை தேடி வந்த போலீசார், சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து சுசித்ராவை மீட்டனர்.  மீட்பின்போது, ‘’என்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் குடும்பத்தினர் நடத்துகிறார்கள். அதனால்தான் வீட்டினருடம் இருந்து விலகி தனியாக வாழ்ந்தேன். இப்போது அங்கேயும் இருக்கப் பிடிக்காததால்தான் ஓட்டலில் தங்கியிருந்தேன்’’ என்று கூறியதாக ஒரு தகவல் வந்தது. காவல்துறையினர் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

‘போக்கிரி’ போன்ற படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவரும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ரேடியோ ஜாக்கியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான சுசித்திராவின் நிலை என்ன என்று அவரின் ரசிகர்கள் கவலையுற்றிருக்கின்றனர்.

 

IIT