Skip to main content

''அவர்களை 15 நாட்களுக்குள் தண்டிக்கவேண்டும்'' - விஜய் படத் தயாரிப்பாளர் பிரதமருக்கு வேண்டுகோள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

fwqfq

 

'ஒன்பதுல குரு' படத்தின் இயக்குனரும், 'பந்தா பரமசிவம்', 'புலி', 'போக்கிரி ராஜா' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான பி.டி செல்வகுமார், அவரின் 'கலப்பை மக்கள் இயக்கம்' சார்பாக கரோனா பாதிப்பு ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு கடந்த 40 நாட்களாக தொடர்ந்து அரிசி மூட்டைகள் வழங்கி வருகிறார். நேற்றைய தினம் திருப்போரூர், கேளம்பாக்கம் பகுதிகளில் வீட்டு வேலை செய்யும் பணி பெண்கள் 100 பேருக்கு அரிசி மூட்டை மற்றும் காய்கறிகளை வழங்கிய அவர், சமீபத்தில் விழுப்புரம் பகுதியில் 10 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஜெயஸ்ரீ என்பவரை பட்டப் பகலில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கொலையாளிகளை மாணவியின் மரணவாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டிப்பது குறித்து பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார். அதில்...

 

''இந்தியா முழுவதுமுள்ள சிசுக் கொலை, பாலியல் வன்கொலை, ஆசிட் ஊற்றி கொலை, நகைக்காக கொலை, வரதட்சணை கொலை ஆகிய வன்கொலைகள் பெண்களுக்கு ஏற்படுகிறது. பெண்கள் மென்மையானவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள். ஜெயஸ்ரீ என்பவரை கொலை செய்தது போன்று மீண்டும் ஒரு கொலை நடைபெறாமல் இருக்க கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தில் இவர்களுக்குத் தண்டனை இருந்தாலும் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகிறர்கள். ஆகவே பாரத பிரதமர் அவர்கள் (சிறப்பு) புதிய சட்டம் ஒன்றை இயற்றி, பெண்களை கொடூர கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு உடனடியாகத் தண்டனை வழங்க வழி வகை செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் வழக்கை முடித்து தண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும். கொலை சம்பவங்கள் குறையும். பாரதியார், ராஜாராம் மோகன்ராய், காந்தியடிகள் இவர்கள் எல்லோரும் பெண்கள் பாதுகாப்புக்காக மாபெரும் குரல் கொடுத்தவர்கள். ஆகவே கொலை சம்பவங்கள் நடக்காமல் இருக்க பாரத பிரதமர் அவர்கள் அவசரமாக சட்டம் இயற்றி, இந்த கொலைகாரர்களுக்கு தண்டனை வழங்கிட வேண்டும். அப்போதுதான் பெண்கள் சுதந்திரமாக நடமாடுவதோடு, நிம்மதியாக இந்த மண்ணுலகில் வாழ முடியும். மேலும், அவர் செவிலியர் தினத்தை முன்னிட்டு நிறைய செவிலியர்களுக்கும் உதவிகள் வழங்கி கௌரவித்தார். குடும்பத்தை துறந்து கரோனா காலத்திலும் அவர்கள் செய்யும் சேவையையும், தியாகத்தையும் பாராட்டுவோம்" என பி.டி செல்வகுமார் கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜய் படம் பார்க்கும் சி.எஸ்.கே வீரர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Ruturaj Gaikwad watch vijay leo movie

இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிஸ் அணியை ருதுராஜ் கெயிக்வாட் தலைமை தாங்குகிறார். இளம் வீரரான இவர் தொடர்ந்து ஒவ்வொரு போட்டிகளிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகலில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளார். 

இந்த நிலையில் ருதுராஜ் கெயிக்வாட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் லியோ படம் பார்ப்பதைப் போன்று ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்தப் புகைப்படத்தை சி.எஸ்.கே ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

 

Ruturaj Gaikwad watch vijay leo movie

லியோ படம் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானது. லலித் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பல சிக்கல்களைத் தாண்டி வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இருப்பினும் ரூ.500 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

“சமத்துக் குழந்தை விஜய்” - கில்லி பட அனுபவம் பகிரும் ஒளிப்பதிவாளர் கோபிநாத்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
ghilli cameraman s. gopinath about vijay

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பைப் பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆரவாரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ்ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். மேலும் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில் கில்லி படத்தின் ஒளிப்பதிவாளர் கோபிநாத், நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் படம் அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது விஜய்யை பற்றி அவர் கூறுகையில், “விஜய் தன்னை இயக்குநரிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார். கதைகேட்கும் வரை இயக்குநரோடு என்ன பண்ணலாம் எப்படிப் பண்ணலாம் எனப் பேசுவார். ஆனால் ஒப்புகொண்ட பிறகு சமத்துக் குழந்தை போல் மாறிவிடுவார். அது புது இயக்குநராக இருந்தாலும் சரி. பெரிய இயக்குநராக இருந்தாலும் சரி. ஒரே மாதிரிதான் இருப்பார். அவரிடமிருந்து 100 சதவீதம் ஒத்துழைப்பு இருக்கும். அவரால் நமக்கு எந்த டென்ஷனுமே இருக்காது. அவரோடு ஒர்க் பண்ணிவிட்டு வெளியில் ஒர்க் பண்ணுவது கஷ்டம். எல்லாரும் அதே மாதிரி ஒத்துழைப்பு கொடுப்பார்கள் எனச் சொல்ல முடியாது” என்றார்.