Skip to main content

நாகேஷை விளையாடவிட்டு நின்று ரசித்த சிவாஜி! - கமல்ஹாசன் சொன்ன கதை

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல் நிறுவனம் ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. விக்ரம், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். வருகிற ஜூலை 19 வெளிவர இருக்கும் இந்தத் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. டீசர் வெளியிடப்பட்ட இந்த விழாவில், தயாரிப்பாளர் கமல்ஹாசன் மேடையில் பேசினார். அப்போது விக்ரம் குறித்தும் படக்குழுவின் பிற உறுப்பினர்கள் குறித்தும் பேசும்பொழுது அனந்து, சிவாஜி கணேசன் உள்ளிட்ட மறைந்த திரைக்கலைஞர்கள் குறித்த நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சின் ஒரு பகுதி...

 

kamalhassan



"ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தொடங்கப்பட்டது, நான் பயணிக்கும் ஊபர் காராக அல்ல. என்னைத் தாண்டியும் நல்ல படங்களை அது உருவாக்க வேண்டுமென்பதற்காக. முதலில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் என்று தொடங்கப்பட்டு பிறகு எனது குருநாதர் அனந்து அவர்களால் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டெர்நேஷனல்' என்று ஆனது. அந்த 'இண்டெர்நேஷனல்' என்ற வார்த்தையை சேர்த்தது அவர்தான். பாலச்சந்தர் அவர்கள் பற்றி நான் சொன்ன அளவுக்கு அனந்து குறித்து நான் சொன்னது கிடையாது. யார் என்று கேட்பார்கள். அவரது குணாதசியமே அவரை யார் என்று கேட்க வைத்ததுதான். பல பெரிய நடிகர்களுக்கு உதவியிருக்கிறார். எங்களுக்கு அவர் எப்படி உதவினாரோ, அப்படி பலருக்கு உதவத்தான் ராஜ்கமல் நிறுவனம்."

  thiruvilayadal



தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்தும் குறிப்பிட்டார். "படத்தில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும், சிறு பாத்திரம் என்றாலும் கூட, 'யார்யா இது' என்று கேட்கவைக்கும் அளவுக்கு இருக்கவேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தின் ஆயுள் காலம் கூடும். ஒரு நல்ல நடிகர் என்பவர் 'கபடி கபடி' என்று உடன் நடிப்பவர்களின் காலை வாருபவராக இல்லாமல், தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். நான் நல்ல நடிகன், என்னுடன் நடிப்பவர்களும் நல்ல நடிகர்கள் என்று பதற்றமில்லாமல் இருக்க வேண்டும். சிவாஜி சார் அப்படித்தான். வெளியே என்னென்னமோ கதையெல்லாம் சொல்வார்கள், 'சிவாஜி சார் நடிக்க விடமாட்டார். மத்தவங்களையெல்லாம் அமுக்கிடுவாரு'ன்னுலாம் சொல்வாங்க. அதெல்லாம் இல்லை. பேருதாரணம் நாகேஷ். திருவிளையாடல் படத்தில் நாகேஷை விளையாட விட்டுட்டு நின்னு அதை ரசிப்பார். அப்படி கம்பீரமாக இருக்க வேண்டும்".      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.