Skip to main content

தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஜாக்கி சான் எச்சரிக்கை! 

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

jackie chan

 

ஹாங்ஹாங் திரையுலகைச் சேர்ந்த சீன நடிகரான ஜாக்கி சானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவருடைய படங்களில் சண்டையுடன் கலந்த காமெடி காட்சிகளைப் பார்க்கவே பலரும் விரும்புவார்கள். 

 

இளம் வயதில் டூப் இல்லாமல் மிகவும் கடுமையான சண்டை காட்சிகளில் ஜாக்கி சான் நடித்தது அவரது ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது . தற்போது 66 வயதாகிறது. தற்போதுவரை எவ்வளவு சிரமமான சண்டை காட்சிகள் என்றாலும் டூப் இல்லாமலே நடித்து வருகிறார்.

 

ஜாக்கி சான் புதிதாக நடித்து வரும் படம் 'வேன்குவார்ட்'. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருக்கும்போது, தவறுதலாக வெள்ளத்தில் சிக்கி பின்னர் பாதுகாவலர்களால் மீட்கப்பட்ட வீடியோ காட்சி வைரலானது.

 

இந்நிலையில், ஜாக்கி சானின் நிறுவனக் குழுமத்துடன் இருக்கும் நிறுவனங்கள் எனக் கூறி பல போலி அறிவிப்புகளால் ஏமாற்று வேலைகள் நடைபெற்று வருகிறது. அதனை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் ஜேசி க்ரூப்ஸ் சார்பில் நோட்டீஸ் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

 

Ad

 

ஜாக்கிசானின் நிறுவனப் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும், தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி ஏமாற்றுபவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ச்சையை கிளப்பும் 'அந்நியன்' ரீமேக்: ஷங்கருக்கு போட்டியாக ஜாக்கிசானை களமிறக்கும் தயாரிப்பாளர் 

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

shankar's anniyan movie remake issue

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், விக்ரம், சதா, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான படம் ‘அந்நியன்’. படம் வெளியானபோது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்று, நடிகர் விக்ரமிற்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக்கொடுத்தது. இதையடுத்து, இயக்குநர் ஷங்கர் பல வருடங்கள் கழித்து ‘அந்நியன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்தார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இப்படத்தை பென் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

 

ad

 

இதனிடையே ‘அந்நியன்’ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிசந்திரன், கதை உரிமம் தன்னிடம் இருக்கும் நிலையில் தன்னுடைய அனுமதியின்றி படத்தை ரீமேக் செய்வது சட்டவிரோதமானது என இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் கதை உரிமத்தில் மோதல் எழுந்தது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

இந்நிலையில், ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "பிரபல பாலிவுட் நடிகரையும் ஜாக்கி சான் இருவரையும் வைத்து இந்தியில் ரீமேக் செய்யவுள்ளேன். ஜாக்கி சானை பல வருடங்களாக நன்கு தெரியும். கமல் நடிப்பில் நான் தயாரித்திருந்த 'தசாவதாரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட அவர் வந்திருந்தார். அடுத்த ஆண்டு ‘அந்நியன்’ படத்தின் ரீமேக் பணிகளைத் தொடங்க உள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சீன அரசியலில் குதிக்க விரும்பும் ஜாக்கிஜான்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

jackie chan

 

உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் திரை நட்சத்திரம் ஜாக்கிஜான். 67 வயதான இவருக்கு தற்போது அரசியல் ஆசை வந்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் சீன அதிபர் ஜின்பிங் உரையாற்றியிருந்தார்.

 

இந்தநிலையில், சீன திரைத்துறையினர் சீன அதிபரின் உரை மீதான தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட சீன திரைப்பட சங்கத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகிக்கும் ஜாக்கிஜான், "என்னால் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்துவத்தை உணர முடிகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சி, தான் சொல்வதையும் தான் அளிக்கும் வாக்குறுதிகளையும் 100 ஆண்டுகளில் அல்ல, சில தசாப்தங்களிலேயே செய்கிறது. நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக விரும்புகிறேன்" என கூறியுள்ளார்.

 

ஜாக்கிஜான் கடந்த சில ஆண்டுகளாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராக இருந்துவருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். 'சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு' என்ற சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பரிந்துரையின் பேரில் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனைக் குழுவிலும் ஜாக்கிஜான் உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.