Skip to main content

ரஞ்சித்தின் அனைத்து படங்களையும் பார்க்க விரும்புகிறேன்.... பாலிவுட் பிரபல இயக்குனர் நெகிழ்ச்சி

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

பாலிவுட்டின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான அனுராக் காஷ்யப் தமிழ் இயக்குனர் பா.ரஞ்சித்தை சந்தித்து பேசியிருப்பது சினிமா வட்டாரத்தில் பேசு பொருளாகி இருக்கிறது.
 

anurag kashyap

 

 

இயக்குனர் அனுராக் சமீபத்தில்தான் ‘காலா’, ‘பரியேறும் பெருமாள்’ஆகிய இரண்டு படங்களை பார்த்திருக்கிறார். இந்த படத்தை பார்த்த பின்னர் ரஞ்சித்தை நேரில் சந்தித்த் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் அனுராக். இதனையடுத்து மும்பையில் ரஞ்சித்துக்கு அனுராக் விருந்தளித்து. அப்போது காலா படத்தையும் ரஞ்சித்தையும் சிலாகித்துக் பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். 
|

இவர்கள் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தை ரஞ்சித் தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து, எனக்கு மிகவும் பிடித்த இயக்கனர்களின் ஒருவரான அனுராக்கை சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு பதிலளித்த அனுராக், “காலாவை நான் தாமதமாகதான் பார்த்தேன். ஆனால், அவருடைய அனைத்து பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்