Skip to main content

"துணிவு சீரியசான படமல்ல; ஜாலியா இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்" - இயக்குநர் ஹெச்.வினோத்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

Director Vinoth share about thunivu

 

பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ள அஜித் நடித்த துணிவு திரைப்படத்தைப் பற்றியும் அஜித் பற்றியும் அதன் இயக்குநர் ஹெச்.வினோத் சில சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு.. 

 

துணிவு சீரியசான படமல்ல. எல்லா விசயங்களையுமே சுவாரசியமா ஜாலியா சொல்ல முயற்சித்திருக்கிற படம், அவ்வளவு தான். அதில் பணம் கையாள்வது பற்றி ஒரு பகுதியாக வருகிறது. தொடர்ச்சியாக மூன்று படம் ஒரே நாயகனோட பயணிப்பது ஆரோக்கியமா, இல்லையான்னு யோசிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. படம் அந்த குழுவிற்கு வேலை செய்ய வசதியாக இருக்கா என்பதை மட்டுமே பார்க்க வேண்டும். நல்ல விசயங்களை சொல்ல ஒரு படம் முனைகிறதா மற்றும் சமூக ரீதியிலான மாற்றங்களை உள்ளடக்கியதா என்பதையும் முக்கியமாகக் கருத வேண்டும். அந்த வகையில் அஜித் உடன் இணைந்து பணியாற்றிய நேர்கொண்ட பார்வையும், வலிமையும் சமூகத்திற்கு தேவையான விசயத்தை பேசியதாக உணர்கிறோம். அந்த வகையில் இந்த இரண்டு படங்களிலிருந்து கற்றுக்கொண்டதை வைத்து துணிவு எடுத்திருக்கிறோம்.

 

அஜித் எப்பவும் ஒரு பெரிய நடிகர் என்று நடந்து கொள்ளமாட்டார். வெகுஜன மக்கள் போல ரொம்ப சாதாரணமாக இருப்பார். என்னோட வார்த்தைகளுக்கு பின்னே ஆழமான அர்த்தம் இருப்பதாக உணர்வார். தனிப்பட்ட தாக்குதல்கள் இல்லாத படங்களை எடுக்க வேண்டும் என்றே விரும்புவோம். பிரபலமான நபர்கள் இருந்தால் வேலை வாங்குறதும் ஈசி என்பதால் நிறைய யூடியூப் செலிபிரிட்டிகளை படத்தில் பயன்படுத்தியிருக்கிறோம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.