Skip to main content

தொடரும் மரணம்... மீண்டும் ஒரு நடிகை தற்கொலை

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

bengali actress bidisha de majumder passed away

 

மேற்கு வங்கத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மக்களிடையே பிரபலமான பல்லவி டே(25) சமீபத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒரு நடிகை தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேற்கு வங்கத்தில் பிரபல மாடல் அழகியாகவும், நடிகையாகவும் இருப்பவர் பிதிஷா  டி மஜூம்தார்(21). இவர் கல்கத்தாவில் டம் டம் பகுதியில் உள்ள குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகை பிதிஷா டி மஜூம்தார் தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டியிருந்த பிதிஷா வீட்டின் அறை கதவை உடைத்து உள்ளே சென்று அவரது உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இதனிடையே நடிகை பிதிஷா அனுபாப் பேரா என்ற நபரை காதலித்து வந்துள்ளார். அவரின் நடவடிக்கை மாறுபாட்டால் சமீபகாலமாக பிதிஷா மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவத்தில் பிதிஷா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகவும், அது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்படுகிறது. நடிகை பல்லவி டேவின் மரணத்தில் இருந்தே மீளாத வங்க திரையுலகினருக்கு பிதிஷாவின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தொடர் மரணங்களால் திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்