Skip to main content

பேயாக ஆர்யா! முடியும் நிலையில் படப்பிடிப்பு...

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
aa

 

 

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் சுந்தர்.சி. அப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், அவர்  தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

 

அரண்மனை 3 படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கின்றனர். கரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது.

 

இந்தநிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பொள்ளாச்சியில் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு, வரும் டிசம்பர் 1 ஆம் தேதியோடு முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரண்மனை 3 படத்தில் ஆர்யா பேயாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்