Skip to main content

"வாவ்...செல்வா அத்தான்.." - வைரலாகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவு

Published on 10/03/2022 | Edited on 10/03/2022

 

aishwarya rajinikanth comments selvaraghavan

 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் செல்வராகவன், 'சாணிக்காயிதம்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதில் செல்வராகவனுடன்  கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 'சாணிக்காயிதம்' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிங்கர்கள் பலரும் லைக், ஷேர் செய்து வந்த நிலையில் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்புகைப்படத்தை லைக் செய்து "வாவ்...செல்வா அத்தான்..." எனப் பாராட்டியுள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிந்த நிலையில் பழசை மறக்காத ஐஸ்வர்யாவின் செயலை பலரும் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்