Skip to main content

முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கடிதம்

Published on 18/11/2020 | Edited on 18/11/2020

 

vijayakumar

 


தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜயகுமார். கடந்த ஒருசில நாட்களாக பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்ப உள்ளது. இதனால் மக்கள் பலரும் 2015போல் திடீரென திறந்துவிடுவார்களா என்று பீதியில் இருக்கின்றனர்.

 

இந்நிலையில் முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “வணக்கம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர் பகுதியில் நான் பல வருடங்களாக குடியிருந்து வருகிறேன். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட பொழுது, எங்களது பகுதியிலிருந்து அடையாறு வரை பல ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன. உயிர் சேதமும் ஏற்பட்டது. 

 

இந்த ஆண்டும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் மட்டம் 21 அடியைத் தாண்டி உயர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடித்தால் 2015ஆம் ஆண்டைப் போல பெரும் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். 

 

ஆகவே, தாங்கள் கவனத்தில் இதைக்கொண்டு முன்னேற்பாடாக ஏரியில் உள்ள தண்ணீரை அளவுடன் திறந்துவிட உத்தரவு பிறப்பித்ததால், கரையோரம் இருப்பவர்களுக்கு உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படாமல் தடுக்க இயலும். எனவே தயவு கூர்ந்து இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். 

 

தங்களால் இதை  செய்ய இயலும் என நான் ஒருமனதாக நம்புகிறேன். கரோனா எனும் கொடு நோயிலிருந்து நம் தமிழக மக்களை எவ்வண்ணம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறீர்களா, அவ்வண்ணமே கரையோரம் வசிக்கும் மக்களையும் காப்பாற்ற வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது” - அருண் விஜய் புகார்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
arun vijay complaint against you tube channel

அருண் விஜய் கடைசியாக ஏ.எல். விஜய் இயக்கத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்திருந்தார். கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் அருண் விஜய், பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில், தற்போது தனது குடும்பம் குறித்து தனியார் யூட்யூப் ஒன்றில் தவறாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அருண் விஜய் சார்பில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. 

அந்த புகார் மனுவில், தன்னைப் பற்றியும் தனது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி பற்றியும் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி தனியார் யூட்யூப் சேனல் ஒன்று வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்த அருண் விஜய், அதனால் தனது குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தவறான தகவல்களைப் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார். 

Next Story

வதந்திகளை நம்ப வேண்டாம் - அருண் விஜய்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

Kindly do not believe any rumors - Arun vijay 

 

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகர்கள் எனப் பட்டியல் எடுத்தால் அதில் என்றுமே விஜயகுமாருக்கு முக்கிய இடம் உண்டு. நாட்டாமை கதாபாத்திரம் என்றாலே நமக்கு விஜயகுமார் ஞாபகத்திற்கு வந்துவிடுவார். பல படங்களில் நாயகன், நாயகியின் அப்பாவாக நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர் விஜயகுமார்.

 

எல்லோரும் தன் மகன்களை மட்டுமே கதாநாயகனாக களம் இறக்குவார்கள். ஆனால், இவரது மகன் மட்டுமல்லாது மகள்கள் அனைவரையுமே சினிமாவில் கதாநாயகிகளாக நடிக்க வைத்தவர். இப்படியான பெருமைகளுக்கெல்லாம் சொந்தக்காரரான விஜயகுமார் சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

நேற்று திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், உடல்நிலை மோசமடைந்ததாகவும் உறுதிப்படுத்தப்படாத வதந்திகள் பரவி வந்தது. இந்நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய் ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், “அப்பா வீட்டில் நலமுடன் தான் இருக்கிறார். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம். உங்களின் அன்பு மற்றும் அக்கறைக்கு நன்றி” என்று கூறியிருக்கிறார்