Skip to main content

“ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்பது அவருக்குதான் தெரியும்” -நடிகர் குமரன் 

Published on 01/09/2020 | Edited on 01/09/2020
kumaran

 

 

சின்னத்திரையில் பாண்டியர் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் பலருக்கு பரிச்சயமானது, பிரபலமானதும் கூட. இதில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்த விஜே சித்ராவுக்கு இந்த கதபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் ரசிகர் கூட்டமே சமூக வலைதளத்தில் உண்டு. மேலும், இவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் குமரன் என்பவருக்கும் ரசிகர்கள் உண்டு. ஜோடியாக பிரபலமான இவர்கள் இருவரையும் ஸ்டார் ஜோடி என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்பது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில் இதற்கு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்து சித்ரா இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துவிட்டார்.

 

இந்நிலையில் அவருடன் ஒன்றாக நடித்த குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''கதிர் - முல்லை ரசிகர்களுக்கு, எங்கள் பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக கவலை தெரிவித்திருந்தீர்கள். அதனைப் பற்றி கவலைப்படாதிர்கள். எப்பொழுதும் போல கதிர் - முல்லையிடம் இருந்து சிறந்தவற்றை காண்பீர்கள்.

 

நான் காதல், சண்டை என எந்த காட்சி வந்தாலும் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்தியிருக்கிறேன். மேலும் இனி செய்யவிருக்கும் காரியங்களையும் சிறப்பாக செய்வேன் என உறுதி கூறுகிறேன். கதிரை பாண்டியன் ஸ்டோரில் மட்டும் தான் பார்க்க முடியும். ஸ்டார் ஜோடி ஷோவில் எங்களை அழைத்திருந்தார்கள்.

 

ஆனால் அது ஏன் நடக்கவில்லை என்பது கடவுளுக்கு தான் தெரியும். ஸ்டார் ஜோடியில் எங்களை எதிர்பார்த்தவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எல்லாவற்றிலும் அடுத்து முறை என்ற ஒன்று உண்டு. அதனால் எந்த சிக்கலிலும் தலையிடாமல் கடந்து செல்லுங்கள்'' என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மர்ம தேசம், ஜீ பூம்பா தொடர்களில் நடித்த லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை

Published on 05/10/2022 | Edited on 05/10/2022

 

marma desam serial actor lokesh rajendran passed away

 

1990களில் தொலைக்காட்சி தொடர்களாக வெளியான மர்ம தேசம், ஜீ பூம்பா, விடாது கருப்பு தொடர்கள் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமானவர் லோகேஷ் ராஜேந்திரன். மர்மதேசம் தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி சமீபத்தில் அதற்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இப்புகைப்படத்தில் குட்டி ராசுவாக நடித்துப் பிரபலமான லோகேஷ் ராஜேந்திரன் இளைஞராக வளர்த்திருந்ததைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். 

 

சின்னதிரையில் குழந்தை நட்சத்திரமாகப் பிரபலமான லோகேஷ், நடிப்பை விட்டுவிட்டு இயக்கம், எடிட்டிங் என தொழில் நுட்ப வேலைகளில் கவனம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் இயக்கிய குறும்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பலரின் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் லோகேஷ் ராஜேந்திரன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது தற்கொலை திரையுலகினர் மற்றும் அவர்களது நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Next Story

25 ஆண்டுகள்... விடாது கருப்பு; ஒன்றுகூடிய மர்ம தேசத்தினர்

Published on 30/08/2022 | Edited on 30/08/2022

 

25 years Vidathu Karuppu celebration

 

மர்மதேசம் என்பது தமிழ் தொலைக்காட்சிகளில் வெளியான தொடராகும். இதனை இயக்குநர் நாகா மற்றும் சி. ஜெ. பாஸ்கர் இயக்கியிருந்தனர். இத்தொடருக்கு இந்திரா சௌந்திரராஜன் கதை எழுதியிருந்தார். இந்த தொலைக்காட்சி தொடர் 1995 லிருந்து 1998 வரை பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பழங்கால சுவராசியமான த்ரில்லர் தொடரான மர்மதேசம் ரகசியம், விடாது கருப்பு, சொர்ணரேகை, இயந்திர பறவை, எதுவும் நடக்கும் என பல பகுதியாக வெளியிடப்பட்டது. இதில் கருப்பசாமி என்ற கற்பனைக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ’விடாது கருப்பு’ தொடர் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலம். அதில் வரும் கருப்பசாமியை அந்த காலத்திலேயே நவீன தொழில்நுட்பத்தின் மூலம் காட்டி பலரையும் வியக்க வைத்திருந்தனர். 

 

இந்நிலையில் இந்த தொடர் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அதில் நடித்த சேத்தன், தேவதர்ஷினி, பொன்வண்னண், விஜய் சாரதி உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து  கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் விஜய் சாரதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.