Skip to main content

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; தமிழக வீரர்கள் இடம்பெற்ற அணி தோல்வி!

Published on 30/07/2021 | Edited on 30/07/2021

 

tokyo olympics

 

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

 

அதன்தொடர்ச்சியாக பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தநிலையில், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகனே யமாகுச்சியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

 

இந்தநிலையில் 4*400 கலப்பு ஓட்டத்தில் இந்திய அணி எட்டாவது இடத்தைப் பிடித்து வெளியேறியுள்ளது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற நான்கு பேரில், ஆரோக்கிய ராஜீவ், ரேவதி, சுபா ஆகிய மூவர் தமிழ்நாட்டை சேர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.