Skip to main content

உலகில் முதல்முறையாக டி.என்.பி.எல்.-ல் அறிமுகம் ஆகும் ஸ்மார்ட் பேட்! 

Published on 23/06/2018 | Edited on 23/06/2018

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் விரைவில் நடைபெறவுள்ளது. தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. இந்தத் தொடரில் ஸ்பெக்டாகாம் எனப்படும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
 

kumble

 

 

 

ஸ்பெக்டாகேம்  எனப்படுவது ஒருவகை ஸ்மார்ட் ஸ்டிக்கர் ஆகும். ட்ராக்கிங் சென்சார் இருக்கும் இந்த ஸ்டிக்கரை, பேட்ஸ்மெனின் பேட்டில் ஒட்டிவிட்டால் அந்த பேட் ஸ்மார்ட் பேட் ஆகிவிடும். இதன்மூலம், பேட்டின் வேகம், அடிப்பவரின் பலம் மற்றும் பந்து பேட்டின் சரியான இடத்தில் பட்டதா? என்பதை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். உலகளவில் முதல் முறையாக டி.என்.பி.எல்-ல் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட் ஸ்டிக்கரைக் கண்டுபிடித்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளேதான். 
 

இதுகுறித்து பேசிய அவர், ‘எனது கண்டுபிடிப்பை டி.என்.பி.எல். மூலம் அறிமுகம் செய்வதில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் இருக்கும் திறமைவாய்ந்த வீரர்களை ஐ.பி.எல். மற்றும் இந்திய அணிக்கு வழங்கியதில் டி.என்.பி.எல்.க்கும் பெருமை உண்டு. அதனால்தான், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் போன்ற வீரர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார். டி.என்.பி.எல். தொடர் வரும் ஜூலை 11ஆம் தேதி தமிழகத்தில் தொடங்க இருக்கிறது. 

 

Next Story

அரசுப் பேருந்தில் பயணித்த கும்பளே!

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

anil kumble travelled in government bus

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து சித்தராமையா முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு பதவியேற்ற உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இளைஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றி அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தது. இதில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டம் கடந்த ஜூன் 11ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்கு சக்தி திட்டம் என்று பெயரிடப்பட்டு அதற்கான அடையாள அட்டையை கர்நாடகா அரசு அறிமுகப்படுத்தியிருந்தது.

 

இந்த நிலையில், தங்களது 28 கோரிக்கைகளை அரசுப் போக்குவரத்துத் துறை நிறைவேற்றத் தவறியதை கண்டித்து நேற்று (11-09-2023) மாநிலம் முழுவதும் கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது. இது குறித்து, தனியார் போக்குவரத்து ஊழியர்கள்  இந்த சக்தி திட்டத்தால் தாங்கள் எதிர்மறையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று கூறினர். பின்னர், ஜூலை 24 மாநில போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டியுடன் கலந்து பேசினர். அப்போது, செயலி மூலம் இயங்கும் வாகன சேவைகளையும் நிறுத்த வேண்டும் என 30 கோரிக்கைகளை வைத்தனர். அதற்கு அமைச்சர், தனியார் போக்குவரத்து சங்கங்களின் 30 கோரிக்கைகளில் 28 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். அரசுத் தரப்பிடம் பதில் தரப்படாததால் நேற்று கர்நாடகா மாநில தனியார் போக்குவரத்து சங்கங்களின்  கூட்டமைப்பு ஸ்ட்ரைக் நடத்தியது.

 

இந்நிலையில், நேற்று கர்நாடகாவுக்கு வந்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அணில் கும்ப்ளே தனது வீட்டிற்கு செல்ல அரசுப் பேருந்தில் பயணம் செய்தார். இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பெங்களூரில் டாக்ஸிகள் இயங்காததால், கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய பயணிகளுக்கு வீடு திரும்ப வாகனம் கிடைக்காத சூழல் உருவானது. இந்த நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அணில் கும்ப்ளே, விமான நிலையத்தில் இருந்து பனசங்கரி வரை மாநகர போக்குவரத்து கழக பஸ்சில் பயணித்துள்ளார். இது குறித்த அணில் கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில், “விமான நிலையத்திலிருந்து இன்று பிஎம்டிசி பஸ்ஸில் வீடு திரும்பினேன்” என பேருந்தில் பயணித்த புகைப்படத்தை பகிர்ந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

7 ஆவது சீசனில் டி.என்.பி.எல்; தொடங்கும் தேதி அறிவிப்பு

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

TNPL in its 7th season; Notice of Commencement Date

 

டி.என்.பி.எல் ஏழாவது சீசன் ஜூன் 12 ஆம் தேதி தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) ஐபிஎல் போட்டிகளைப் போலவே நடத்தப்படுகிறது. இந்தத் தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அதன்படி நெல்லை கிங்ஸ், சேப்பாக் கில்லீஸ், மதுரை பேந்தர்ஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் போன்ற அணிகள் விளையாடுகின்றன.

 

இந்தத் தொடர் 25 நாட்கள் நடைபெறும் எனவும் 32 ஆட்டங்கள் விளையாடப்பட இருக்கின்றன எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், கோவை, நெல்லை என மூன்று இடங்களில் மட்டுமே ஆட்டம் நடைபெற இருக்கிறது என்றும் கடந்த ஆண்டுகளைப் போல் இல்லாமல் சென்னை, திண்டுக்கல் போன்ற இடங்களில் போட்டிகள் நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, ஜூன் 12 முதல் 30 ஆம் தேதி கோவையிலும், ஜூலை 1 முதல் 5 ஆம் தேதி நெல்லையிலும் லீக் ஆட்டங்கள் நடக்கும். முதல் தகுதிச் சுற்று சேலத்தில் ஜூலை 7, 8 தேதிகளில் நடைபெறும் என்றும் நெல்லையில் ஜூலை 10 ஆம் தேதி 2வது தகுதிச் சுற்று ஆட்டமும், 12 ஆம் தேதி இறுதி ஆட்டமும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.