Skip to main content

சென்னை மைதானம் குறித்து மனம் திறந்த மைக் ஹஸ்ஸி!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

Michael Hussey

 

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள், 4 தோல்விகள் கண்டுள்ளது. சென்னை அணி வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பேட்டிங் பயிற்சியாளருமான மைக் ஹஸ்ஸி சென்னையில் விளையாடிய போட்டிகள் மற்றும் சென்னை மைதானம் குறித்து மனம் திறந்துள்ளார்.

 

அதில் அவர், "சென்னை மைதானம் நமது மிகப்பெரிய பலம். கடந்த காலங்களில் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். புது சூழலுக்கு ஏற்ப மாற வேண்டியது அவசியம். இதற்கு முன்பு சென்னையில் இருந்து வெளியே சென்று புனேவில் விளையாடினோம். அந்த சூழலுக்கு ஏற்ப நமது வீரர்கள் மாறிக் கொண்டனர். நம்மிடம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். எந்த சூழலில் என்ன மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நம்மால் தரமான ஆட்டத்தை வரும் போட்டிகளில் வெளிப்படுத்த முடியும்" எனக் கூறினார்.