Skip to main content

நெஞ்சுவலியால் துடித்த பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் ரசிகர்கள்...

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிரையன் லாரா நெஞ்சுவலி காரணமாக மும்பையின் பரேலில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

brian lara admitted in mumbai hospital due to chest pain

 

 

உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்த அவர், அதன் பின் இந்தியாவுக்கு வருகை தந்தார். மும்பையில் தங்கியிருந்த அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையின் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விரைவில் அவரது உடல்நலன் குறித்து அறிக்கை வெளியாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 90 களில் சச்சினுக்கு இணையாக பேட்டிங்கில் புகழப்பட்டவர் லாரா என்பது குறிப்பிடத்தக்கது.