Skip to main content

ஐ.பி.எல். அப்டேட்ஸ்... இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்களுக்கு முதல்போட்டியில் இருந்தே விளையாட அனுமதி!

Published on 21/08/2020 | Edited on 21/08/2020

 

IPL

 

ஐ.பி.எல். போட்டிகளில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் முதல்போட்டியில் இருந்தே விளையாட அனுமதிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13 -ஆவது ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அனைத்து அணி வீரர்களும் இந்தத் தொடருக்காக உற்சாகமாக தயாராகி வருகின்றனர். சென்னை, பஞ்சாப், ராஜஸ்தான் அணி வீரர்கள் ஏற்கனவே இத்தொடரில் பங்கேற்பதற்காக அமீரகம் சென்றுவிட்டனர். இந்நிலையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா வீரர்கள் முதல்போட்டியிலிருந்து விளையாட முடியாத சூழல் நிலவி வந்தது. அதாவது, அமீரகம் வந்தடையும் வீரர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். அதன் பின்புதான் அவர்கள் பயிற்சி எடுக்கவோ அல்லது விளையாடவோ அனுமதிக்கப் படுவார்கள் என விதிகள் விதிக்கப்பட்டிருந்தன.

 

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரானது செப்டம்பர் மாதம் 16 -ஆம் தேதி நிறைவடைகிறது. இதனை முடித்துவிட்டு இரு அணி வீரர்களும் அமீரகம் வந்து, பின்பு தனிமைப்படுத்தி அவர்கள் விளையாடத் தயாராகும் முன் முதற்கட்ட போட்டிகள் சில முடிவடைந்துவிடும். இரு அணிகளைச் சேர்ந்த அதிரடி வீரர்கள் பலர் ஐ.பி.எல். அணிகளில் முக்கிய இடம் வகிப்பதால் அவர்கள் இல்லாத போட்டிகளில் சற்று விறுவிறுப்பு குறையலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கவலை தெரிவித்தனர்.

 

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் சஞ்சீவ் சுரிவாலா இது குறித்து கூறும் போது, "ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே பாதுகாப்பான சூழலில்தான் உள்ளனர். அவர்கள் தனி விமானத்தில் அமீரகம் அழைத்து வரப்பட இருக்கின்றனர். இதனால் அங்கு அவர்களுக்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தல் என்பது தேவைப்படாது. எனவே அவர்கள் முதல் போட்டியிலிருந்தே விளையாட முடியும்" எனக் கூறியுள்ளார். இந்தத் தகவலானது கிரிக்கெட் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

 

பென் ஸ்டோக்ஸ், டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்ட 29 வீரர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அமலாக்கத்துறை சம்மனுக்கு அவகாசம் கேட்ட தமன்னா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
tamanna asked for time to summon the enforcement department regards ipl

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமன்னாவிற்கு இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியது. 

இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராக தமன்னா அனுமதி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர், மும்பையில் தற்போது இல்லை என சைபர் கிரைம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் பின்னர் வேறொரு நாளில் ஆஜராகவுள்ளதாக கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

தமன்னாவிற்கு சைபர் கிரைம் சம்மன்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
tamanna summoned by maharashtra cyber crime for ipl telecast issue

கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியது. அதன்படி அந்நிறுவனத்தின் செயலியான ஜியோ சினிமா செயலியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வந்தது. 2023 முதல் அடுத்த ஐந்தாண்டிற்கு ஐபில் தொடரின் டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஃபேர்பிளே என்கிற சூதாட்ட செயலியில் சட்டவிரோதமாக ஐபிஎல் போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதாக கூறி வியாகாம் நிறுவனம் மகாராஷ்ட்ரா சைபர் கிரைமில் புகார் அளித்தது. அந்த புகாரில், ஃபேர்பிளே செயலில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக குறிப்பிட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஃபேர்பிளே செயலியின் ஊழியர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அச்செயலியை விளம்பரப்படுத்திய பிரபலங்களை விசாரணை செய்ய முடிவெடுத்தனர். அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் பாட்ஷா, சஞ்சய் தத், ஜாக்குலின் பெர்னாண்டஸ், தமன்னா உள்ளிட்ட பலர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.  

கடந்த 23 ஆம் தேதி சஞ்சய் தத்துக்கு சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினர். ஆனால், தான் இந்தியாவில் இல்லாத காரணத்தால் தன்னால் ஆஜராக முடியவில்லை என சஞ்சய் தத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது தமன்னாவிற்கு வருகிற 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.