Skip to main content

"காசிக்கு செல்ல முடியாதவர்கள் இந்த ஊருக்கு செல்லுங்கள்" - நாஞ்சில் சம்பத் பகிரும் தமிழ்ச்சமய வரலாறு 

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

nanjil sampath

 

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், விருத்தாச்சல திருத்தலம் குறித்தும் அங்கு வாழ்ந்த குரு நமச்சிவாயர் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு... 

 

பாரதி கண்ணனைப் பற்றி பாடுகிறபொழுது என் பசிக்குச் சோறு, என் மழைக்கு குடை கண்ணன் என்றார். பாரதி கண்ணனை வேலைக்காரராக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலராக, மன்னனாக என எல்லா கண்ணோட்டத்திலும் பார்த்தார். பாரதியின் கண்ணன் பாட்டு அற்புதமான இலக்கியம். எல்லாவற்றையும் இறைவனிடத்தில் கேட்பது என்பது ஒரு சம்பிரதாயம். இன்றைய விருத்தாச்சலம் ஒரு காலத்தில் முதுகுன்றம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த சிவத்தலம். காசிக்குச் செல்ல காசில்லாதவர்கள் விருத்தாச்சலம் செல்லலாம். காசிக்குச் சென்றால் கிடைக்கும் புண்ணியம் விருத்தாச்சலம் சென்றாலே கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் உள்ளது. அதனால்தான் விருத்தாச்சலத்திற்கு விருத்தகாசி என்றொரு பெயரும் உண்டு. 

 

விருத்தாச்சலத்தில் குரு நமச்சிவாயர் என்று ஒருவர் இருந்தார். அவர் சோறு கொண்டு வா என்று விருத்தாச்சலத்தில் உள்ள அம்பாளிடம் கேட்கிறாள். அம்பாள் மீது அளவு கடந்த காதல் கொண்ட அவர் எல்லாம் அவளே என்று நம்பினார். அவளிடம் சோறு கேட்பதை, 

 

"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி

என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற

நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி

மலைக் கிழத்தி சோறு கொண்டு வா"

 

என்று பாட்டாகப் பாடுகிறார். வழக்கமாக அவர் சோறு கொண்டு வா என்று அம்பாளிடம் கேட்டால் உடனே அவருக்குச் சோறு வந்துவிடும். ஆனால், அன்று சோறு வரவில்லை. அம்பாள் சோறு கொண்டுவருகிறாளா என்று  காத்திருக்கிறார். ஆனால், தன்னை கிழத்தி கிழத்தி என்று சொல்லியதால் அம்பாள் கோவித்துக் கொண்டுவிட்டாள். குரு நமச்சிவாயர் உரிமையோடு கிழத்தி என்று கூறியதை வயதானவள் என்று தன்னை அழைப்பதாக நினைத்து அம்பாள் கோவித்துவிட்டார். உடனே குரு நமச்சிவாயர்,

 

"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே

பத்தர் பணியும் பதத்தாளே -அத்தன்

இடத்தாளே முற்றா இளமுலை மேலார

வடத்தாளே சோறு கொண்டு வா" 

 

என்று பாடுகிறார். கிழத்தி என்று அழைப்பதை விடுத்து, தற்போது அம்பாளை இளமையானவளாகப் பாவித்து பாடுகிறார். அவருக்குச் சோறும் கிடைக்கிறது. வானம் வேண்டும், தானம் வேண்டும். எதுவாக இருந்தாலும் அதை அம்பாள் தரவேண்டும் என்று வாழ்ந்தவர் குரு நமச்சிவாயர். கண் மூடி கண் திறப்பதற்குள் எண்ணூறு பாடல்கள் பாடுகிற ஆற்றல் அவரிடம் இருந்தது. தமிழுக்கு அறம், திறம், நிறத்தோடு இறைவனிடம் உரிமை எடுத்துக்கொள்ளும் குணமும் உள்ளது. சித்தன் போக்கு சிவன் போக்கு என்று எதற்கும் ஆசைப்படாமல் வாழ்ந்தவர்களில் ஒருவரான குரு நமச்சிவாயரை கொண்டாடி மகிழ்ந்தால் இதயத்தில் குதூகலமும் நெஞ்சில் நம்பிக்கையும் பூத்துச் செழிக்கும்.  

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.