Skip to main content

சிறியரக விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் பலி!!

Published on 10/09/2018 | Edited on 10/09/2018
crash

 

தெற்கு சூடானில்  தலைநகர் ஜூபாவிலிருந்து இரோல் நகரம் நோக்கி 22 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி 19 பேர் பலியாகியுள்ளனர்.

 

இதுபற்றி ஜூபா மாநில தகவல் அமைச்சர் டபான் அபெல் கூறியதாவது, தெற்கு சூடானில் தலைநகர் ஜோபாவிலிருந்து இரோல் நகரம் நோக்கி 22 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறியரக விமானம் ஏரியில் விபத்துக்குள்ளாகி 19 பேர் பலியாகியுள்ளனர். இருவரை காணவில்லை. இதுவரை 6 வயது குழந்தை உள்பட 3 பேரை காயங்களுடன் மீட்டுள்ளோம். எதனால் இந்த விபத்து நடந்துள்ளது என இன்னும் தெரியவில்லை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம் எனக்கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்