Skip to main content

சர்ச்சை வரைபடம்... சர்வதேச அங்கீகாரம் பெற நேபாளத்தின் புதிய திட்டம்...

Published on 03/08/2020 | Edited on 03/08/2020

 

nepal to send its new map to top organisations

 

இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்தின் புதிய வரைபடத்தினை, ஐநா சபை உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்ப நேபாளம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

இந்தியாவின் எல்லைக்குட்பட்ட லிபுலேக், கல்பான மற்றும் லிம்பியாதுரா உள்ளிட்ட சில பகுதிகளைத் தங்களது எல்லைக்குள் சேர்த்து நேபாள அரசு புதிய வரைபடம் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. நேபிலத்தின் இந்த செயலுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, இதன் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையால் இருநாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்ட புதிய வரைபடத்தை இந்தியா உள்படப் பல நாடுகளுக்கும், ஐநா சபை போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு விரைவில் அனுப்ப இருப்பதாக அந்நாட்டு அமைச்சர் பத்ம ஆர்யால் தெரிவித்துள்ளார்.. இம்மாத மத்தியில் இதற்கான பணிகள் முடிவடைந்து, நேபாளத்தின் புகைப்படங்கள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல அமைப்புகளுக்கு அனுப்பப்பட உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், கூகுள் உள்ளிட்ட இணைய சேவை நிறுவனங்களுக்கும் இந்த வரைபடத்தை அனுப்ப நேபாளம் முடிவு செய்துள்ளது.. இதன்மூலம் தங்களது நாட்டின் புதிய வரைபடத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என நேபாளம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேபாளம் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கையால் மக்கள் அச்சம்

Published on 04/11/2023 | Edited on 05/11/2023

 

Nepal Earthquake; People fear due to rising death toll

 

நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது. 

 

இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.

 

 

 

Next Story

நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Nepal earthquake lost life toll rises to 128

 

நேபாளத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

 

நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

 

இந்த நிலையில் நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்படுகிறது.