Skip to main content

அணு ஆயுத பயன்பாடு இதற்காக மட்டுமே இருக்கும் : கூட்டாக உறுதியளித்த வல்லரசுகள்!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

NUCLEAR WEAPONS

 

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து அணு ஆயுதப் போரைத் தடுப்பது மற்றும் அணு ஆயுதப் போட்டியை தவிர்ப்பது தொடர்பாக ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பிற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன.

 

சீனா உள்ளிட்ட நாடுகள் அணு ஆயுதங்களை பெருக்கி வருவது அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த ஐந்து நாடுகள் கூட்டாக அணு ஆயுதங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஐந்து நாடுகளின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அணு ஆயுத நாடுகளுக்கு இடையேயான போரைத் தவிர்ப்பது மற்றும் மூலோபாய அபாயங்களைக் குறைப்பதை தங்கள் முதன்மை பொறுப்புகளாக கருதுகின்றன.

 

அணு ஆயுதப் போரை ஒருபோதும் நடத்தக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அணு ஆயுத பயன்பாடு நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அணு ஆயுதங்கள் இருக்கும் வரை, அவை தற்காப்பு நோக்கங்களுக்காகவும், போரைத் தடுப்பதற்காகவும் பயன்படுத்தப்படும் என உறுதியளிக்கிறோம். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்த வாக்குறுதிகளில் (NPT) நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அணு ஆயுதங்களின் அங்கீகரிக்கப்படாத அல்லது திட்டமிடப்படாத பயன்பாட்டைத் தடுப்பதற்கான எங்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், அதனை  மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் ஒவ்வொருவரும் உத்தேசித்துள்ளோம். இவ்வாறு ஐந்து நாடுகளின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.