Skip to main content

சூடானில் செராமிக் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 18 பேர் உயிரிழப்பு!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

சூடான் நாட்டின் கார்டம் நகரில் டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் 50 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று எரிவாயு நிரப்பப்பட்டு தொழிற்சாலையில்  நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென வெடித்து சிதறியதில் தொழிற்சாலையில் தீ பிடித்தது. இதில் இந்திய தொழிலாளர்கள் உட்பட 23 பேர் தீயில் சிக்கி பலியாகி உள்ளனர். மேலும் இந்த விபத்தில் 130க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியானது. 

 

fire at ceramic plant in Sudan

 

இந்நிலையில் இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்தநிலையில் உயிரிழந்த 23 பேரில் தமிழகம் உட்பட இந்தியாவை சேர்ந்த 18 பேர்  உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. பலியானவர்களில் 18 பேர் இந்தியர்கள் என உறுதியாகியுள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அதிகாரபூர்வமற்ற தகவலும் வந்துள்ளது.

தீ விபத்து தொடர்பான தகவல்கள் அறிந்துகொள்ள சூடானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம். +249-921917471 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அறந்தாங்கியில் பயங்கர தீ விபத்து! - நகைக்கடை, பாத்திரக்கடை எரிந்து சேதம்!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
 fire broke out at a firecracker shop in Aranthangi

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை சாலையில் உள்ள நகைக்கடை மற்றும் பட்டாசுக் கடையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயானது பாத்திரக் கடைக்குப் பரவி அருகே உள்ள கடைகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளதால் தீயை அணைக்கும் பணியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் உள்ளிட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தீபாவளிக்கு விற்பனை செய்து மீதமுள்ள பட்டாசுகளை குடோனில் வைத்திருந்தனர். அந்த பட்டாசுகளும் வெடித்து தீயை மேலும் பரவச் செய்துள்ளன. நகைக்கடையில் உள்ள தங்க நகைகள், பாத்திரக் கடையில் உள்ள பல லட்சம் மதிப்பிலான அலுமினியம், பித்தளை, எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கப் போராடி வருகின்றன.

அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

ஓட்டலில் தீ விபத்து! அலறியடித்து வெளியேறி தப்பித்த வாடிக்கையாளர்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Aruppukottai hotel fire incident

விருதுநகர் மாவட்டம் -  அருப்புக்கோட்டை பஜார் பகுதியில்,  இனிமைஹோட்டல் என்ற பெயரில் தனியார் உணவகம் உள்ளது.  இந்த உணவகத்தின் மாடியிலுள்ள சைனீஸ் உணவு தயார் செய்யும் பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.  அங்கிருந்து தீ பரவி,  மாடி அறை முழுவதும் மளமளவென்று தீ பற்றி எரிந்தது. தீ பற்றி எரிந்ததும்,  உணவகத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் அனைவரும் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர்.

இந்தத்  தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீ பற்றி எரிந்த பகுதியில் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத்  தீவிபத்தில் உணவகத்தில் இருந்த மின்சாதனப் பொருட்கள், பில் போடும் கம்ப்யூட்டர்கள், டேபிள்கள்,  சேர்கள்  ஆகிய அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

Aruppukottai hotel fire incident

இதே உணவகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் தீ விபத்து ஏற்பட்டது .மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? சமையல் அறையில் அதிக வெப்பம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா?  இல்லை வேறு ஏதேனும் காரணமா?  என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.