Skip to main content

நிரந்தர விசா கொடு; 10 ஆயிரம் பேருக்காக 22 பெண்கள் நடைப்பயணம்

Published on 06/10/2023 | Edited on 07/10/2023

 

Australian government wants permanent visa for 10 thousand people women walk

 

போர்முனைப் பகுதிகளில் இருந்து சொந்த நாடுகளில் வாழ முடியாத சூழலில் உயிரைப் பணயம் வைத்து வேறு நாடுகளுக்குச் சென்று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் இலங்கை, ஈரான் போன்ற நாடுகளில் இருந்து மக்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து பல்லாயிரக்கணக்கான கி.மீ கடந்து கடல் வழியாகச் சிறிய ரக கப்பலில் ஆபத்தான முறைகளில் பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலியா வந்துள்ளனர். அப்படி அகதிகளாக வந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக நிரந்தர விசா கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலியா அரசு இந்த போராட்டங்களுக்கு செவி சாய்க்கவில்லை.

 

Australian government wants permanent visa for 10 thousand people women walk

 

இந்த நிலையில் ஈரான், இலங்கை நாட்டைச் சேர்ந்த 22 பெண்கள் மெல்போனில் இருந்து ஆஸ்திரேலியா பாராளுமன்ற வரை நடைப்பயணமாகச் சென்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தவுள்ளனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய இந்த நடைப்பயணம் பாம்புகள், வன விலங்குகள் நிறைந்த காடுகள் மழை, சகதி, கற்கள் எனக் கரடுமுரடான பாதைகள் என 650 கி.மீ தூரம் பயணிக்கின்றனர். அப்போது, பெண்களின் கால்கள் புண்ணாகிப் போனாலும் லட்சிய பயணத்தை நிறுத்தவில்லை. பல இடங்களில் இரவில் தங்கவும், உணவுக்கும் சிகிச்சைக்கும் நல்ல உள்ளங்கள் உதவி வருகின்றனர். இந்தப் பயணத்தின் முடிவில் நல்ல தீர்வு கிட்டும் என்ற எண்ணத்தோடு வலிகளை மறந்து பயணிக்கிறார்கள்.

 

Australian government wants permanent visa for 10 thousand people women walk

 

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்று இருக்கும் ரதி நம்மிடம் பேசியபோது, “இலங்கையிலிருந்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா வந்தேன். எங்க பிள்ளைகள் படிக்கணும் சந்தோசமா வாழணும்னுதான் இங்கே அகதியாக வந்தோம். எங்களைப் போல பல நாடுகளில் இருந்தும் வந்தவர்களுக்கு விசாரணை முடிந்து நிரந்தர விசா கொடுத்துட்டாங்கன்னா இங்கே உள்ள அனைத்து சலுகைகளும் கிடைக்கும். படிப்பு, வேலை வாய்ப்பு என எல்லாமே கிடைக்கும். ஆனால் விசாரணை முடங்கி கிடக்கிறது.

 

Australian government wants permanent visa for 10 thousand people women walk

 

இதனால் நிரந்தர விசா கிடைக்கல. இப்ப எங்கள் கோரிக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சுமார் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர விசா கொடுங்கள் என்பதுதான். எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நடைப்பயணம் தொடங்கிய போது, எங்கள் குழந்தைகள் வந்து கட்டியணைத்து முத்தம் கொடுத்து கண்ணீரோடு அனுப்பி வைத்தனர். அக்டோபர் 18 ஆம் தேதி 650 கி.மீ தூரத்தை நிறைவு செய்து பாராளுமன்றம் நோக்கிச் செல்கிறோம். அன்று எங்களுடன் ஆதரவு தெரிவிக்கும் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

சோனியா காந்தி எம்.பி.யாக பதவியேற்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Sonia Gandhi sworn in as MP

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் 54 பேர் நேற்றுடன் (03.04.2024) ஓய்வு பெற்றனர். அவர்களில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவார். இதன் மூலம் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இவருடன் 9 மத்திய அமைச்சர்களும் ஓய்வு பெற்றனர். அதே சமயம் இந்த காலியிடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி இன்று (04.04.2024) பதவியேற்றார். சோனியா காந்திக்கு மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதே போன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி குமார் வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த 1999 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலம் அமேதி, கர்நாடக மாநிலம் பெல்லாரி தொகுதியில் இருந்து முதன் முதலாக சோனியா காந்தி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 5 முறை மக்களவைத் தேர்தலில் வென்ற சோனியா காந்தி ராஜஸ்தானில் இருந்து காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியேற்றுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். இது குறித்து மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “இன்று ராஜ்யசபாவில் பதவியேற்று, தனது புதிய இன்னிங்ஸைத் தொடங்கும் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுச்சி மிக்க எனது நல்வாழ்த்துகள். பாராளுமன்ற உத்தியை தொடர்ந்து வழிநடத்தும் அவர்,  மக்களவையில் 25 ஆண்டுகள் பணியாற்றி முடித்துள்ளார். இப்போது நானும் எனது சக உறுப்பினர்களும் ராஜ்யசபையில் அவரது வரவை எதிர்பார்க்கிறோம். அவரது பதவிக் காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.