Skip to main content

மோசமான சாலையால் கோர விபத்து; 24 ஐ தொட்ட பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்...

Published on 22/01/2019 | Edited on 22/01/2019

 

dfddf

 

பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து பஞ்ச்கூர் பகுதிக்கு பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று லாஸ்பெல்லா எனும் இடத்தை கடந்துசென்றுகொண்டிருந்தபோது எதிரே கட்டுப்பாடின்றி வந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இந்த விபத்தில் பேருந்து  தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் பேருந்தில் இருந்த அனைவரும் எரிந்துவிட்டதாக அந்த பகுதியில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஓட்டுநரின் அஜாக்கிரதை மற்றும் மோசமான சாலையே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானவர்கள் மோசமான சாலைகள் காரணமாக பாகிஸ்தானில் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்